.

Pages

Wednesday, August 14, 2019

உள்நாட்டு போரில் 8 மகன்களை இழந்த தாய் ஹஜ்ஜை நிறைவேற்றி ஆறுதலடைந்தார்!

அதிரை நியூஸ்: ஆக.14
உள்நாட்டு போரில் 8 மகன்களை இழந்த தாய் ஹஜ்ஜை நிறைவேற்றி ஆறுதலடைந்தார்

ஏமன் நாட்டில் ஹவ்தி எனப்படும் ஈரான் ஆதரவுபெற்ற ஷியா தீவிரவாதிகளுக்கும் ஏமன் அரசுக்கு ஆதரவான சவுதி கூட்டுப்படைகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகின்றது. இதில் தனது 8 மகன்களையும் ஒவ்வொருவராக இழந்து நிற்கதியானார் 60 வயது தாயான ஆலியா ஜெய்னுல்லாஹ்.

8 மகன்கள் மட்டுமல்ல தனது பேரக்குழந்தைகள் சிலரையும் போரில் இழந்துள்ள ஆலியா அவர்களுக்கு ஹஜ் செய்ய வேண்டும் என்பது இளம் வயது முதலே கனவு ஆனால் குடும்பத்தின் வறுமைச்சூழலால் அவரது கணவரால் நிறைவேற்ற இயலவில்லை பின்பு மகன்கள் ஹஜ்ஜிற்கு அழைத்து செல்வதாக உறுதியளித்திருந்தனர் ஆனால் அவர்களின் வாக்குறுதி நிறைவேறுமுன் மரணத்தை தழுவினர், இதனால் அவருடைய ஹஜ் கனவும் நொறுங்கியது ஆனால் அறியா புரத்திலிருந்து உதவி செய்யக்கூடியவன் எல்லாம் வல்ல ரஹ்மான் அல்லவா, அல்ஹம்துலில்லாஹ்.

தனது 8 மகன்களையும் இழந்து புத்திர சோகத்துடனிருந்த தாய் ஆலியா அவர்களுக்கு சவுதியில் மன்னரின் விருந்தினர்கள் என்ற திட்டத்தின் கீழ் ஹஜ் செய்திட வாய்ப்புத் தேடிவர மன திருப்தியோடு ஹஜ் கடமைகளை நிறைவேற்றி மன ஆறுதலடைந்தார், அல்லாஹ் அவருடைய ஹஜ்ஜை ஏற்றுக் கொள்வானாக மேலும் அவரது இழப்புகளுக்குரிய நற்கூலிகளை இம்மையிலும் மறுமையிலும் வழங்குவானாக.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.