அதிரை நியூஸ்: ஆக.14
அல்ஹம்துலில்லாஹ். ஹஜ் யாத்திரை வெற்றிகரமாக நிறைவடைந்ததை தொடர்ந்து இன்று உள்நாட்டு விமான சேவைகள் மூலம் ஹஜ் செய்ய வந்தவர்கள் மீண்டும் விமானங்கள் மூலம் வீடு திரும்பத் துவங்கினர்.
நாளை புதன் முதல் வளைகுடா நாடுகளின் ஹஜ் யாத்ரீகர்கள் விமானங்கள் மூலம் திரும்பவுள்ள நிலையில் அனைத்து நாடுகளுக்குமான விமான சேவைகள் வியாழன் (ஆக.15) முதல் துவங்கி செப்.15 வரை நடைபெறும்.
இந்த வருட ஹஜ்ஜிற்கு 25 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வந்துள்ள நிலையில் அவர்களில் 3ல் ஒரு பங்கினர் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் எனவும் அவர்களில் சரிபாதியினர் பெண்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று 3 ஷைத்தான் அடையாளங்களுக்கும் கல்லெறிந்து வரும் ஹாஜிகள் இன்று சூரிய மறைவிற்குள் அந்த கிரிகையை முடிக்காவிட்டால் அவர்கள் இன்றிரவை மினாவில் தங்கி கழிக்க வேண்டும். 3 ஜம்ரத்துகளில் கல்லெறிந்தவர்கள் புனித மக்காவுக்கு திரும்பி தங்களின் இபாதாஹ் மற்றும் விடைபெறும் தவாபுகளை நிறைவேற்றுவர்.
இந்நிலையில், புனித மக்கா மற்றும் புனிதத் தலங்களில் பலத்த மழை பெய்து வருகின்றது. இம்மழையின் தாக்கத்திலிருந்து யாத்ரீகர்களை காப்பதற்கும், மினா குடில்களில் தங்கியிருப்போருக்கும் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. புனித ஹரம் ஷரீஃபில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற 16 மழைநீர் அகற்றும் இயந்திரங்களுடன் 200 தொழிலாளர்கள் ஒவ்வொரு ஷிப்ட்டிலும் தொடர்ந்து உழைத்து வருகின்றனர். இதனால் தவாப் உள்ளிட்ட வணக்க வழிபாடுகள் தங்குதடையின்றி நடந்து வருகின்றன.
ஜித்தா விமான நிலையம் வழியாக புனித மக்கா வந்தவர்களை மஸ்ஜிதுன் நபவி மற்றும் ரசூல் ஸல் அவர்களின் அடக்கத்தலத்தை தரிசிப்பதற்காக அல் ஹரமைன் அதிவிரைவு ரயில் சேவைகளும் நடைபெற்று வருகின்றன.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்
அல்ஹம்துலில்லாஹ். ஹஜ் யாத்திரை வெற்றிகரமாக நிறைவடைந்ததை தொடர்ந்து இன்று உள்நாட்டு விமான சேவைகள் மூலம் ஹஜ் செய்ய வந்தவர்கள் மீண்டும் விமானங்கள் மூலம் வீடு திரும்பத் துவங்கினர்.
நாளை புதன் முதல் வளைகுடா நாடுகளின் ஹஜ் யாத்ரீகர்கள் விமானங்கள் மூலம் திரும்பவுள்ள நிலையில் அனைத்து நாடுகளுக்குமான விமான சேவைகள் வியாழன் (ஆக.15) முதல் துவங்கி செப்.15 வரை நடைபெறும்.
இந்த வருட ஹஜ்ஜிற்கு 25 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வந்துள்ள நிலையில் அவர்களில் 3ல் ஒரு பங்கினர் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் எனவும் அவர்களில் சரிபாதியினர் பெண்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று 3 ஷைத்தான் அடையாளங்களுக்கும் கல்லெறிந்து வரும் ஹாஜிகள் இன்று சூரிய மறைவிற்குள் அந்த கிரிகையை முடிக்காவிட்டால் அவர்கள் இன்றிரவை மினாவில் தங்கி கழிக்க வேண்டும். 3 ஜம்ரத்துகளில் கல்லெறிந்தவர்கள் புனித மக்காவுக்கு திரும்பி தங்களின் இபாதாஹ் மற்றும் விடைபெறும் தவாபுகளை நிறைவேற்றுவர்.
இந்நிலையில், புனித மக்கா மற்றும் புனிதத் தலங்களில் பலத்த மழை பெய்து வருகின்றது. இம்மழையின் தாக்கத்திலிருந்து யாத்ரீகர்களை காப்பதற்கும், மினா குடில்களில் தங்கியிருப்போருக்கும் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. புனித ஹரம் ஷரீஃபில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற 16 மழைநீர் அகற்றும் இயந்திரங்களுடன் 200 தொழிலாளர்கள் ஒவ்வொரு ஷிப்ட்டிலும் தொடர்ந்து உழைத்து வருகின்றனர். இதனால் தவாப் உள்ளிட்ட வணக்க வழிபாடுகள் தங்குதடையின்றி நடந்து வருகின்றன.
ஜித்தா விமான நிலையம் வழியாக புனித மக்கா வந்தவர்களை மஸ்ஜிதுன் நபவி மற்றும் ரசூல் ஸல் அவர்களின் அடக்கத்தலத்தை தரிசிப்பதற்காக அல் ஹரமைன் அதிவிரைவு ரயில் சேவைகளும் நடைபெற்று வருகின்றன.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.