.

Pages

Thursday, August 29, 2019

பட்டுக்கோட்டையில் கண்களை கட்டிக்கொண்டு சைக்கிள் ஓட்டி 5-ம் வகுப்பு சிறுவன் சாதனை!

பட்டுக்கோட்டை, ஆக. 29
தேசிய விளையாட்டு தினத்தையொட்டி, பட்டுக்கோட்டையில் ஐந்தாம் வகுப்பு மாணவன் தனது கண்களை கட்டிக்கொண்டு மூன்று கிலோமீட்டர் தூரம் சைக்கிள் சாதனை படைத்துள்ளார்.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பொன்னவராயன் கோட்டை பகுதியைச் சேர்ந்த கட்டிட பொறியாளர் ஆனந்த் என்பவரின் மகன் ஆசிய்வ் (வயது 9). இவர், 5 ஆம் வகுப்பு படித்து வருகிறார். சிறு வயதிலேயே சைக்கிள் ஓட்டுவதில் ஆர்வம் காட்டி வந்த ஆசிய்வ் கண்ணை கட்டிக் கொண்டு சைக்கிள் ஓட்ட வேண்டும் என்றும் இதன் மூலம் உலக சாதனை செய்ய வேண்டும் என்ற நோக்கில் அதற்கான பயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், தேசிய விளையாட்டு தினமான இன்று முதன் முயற்சியாக தமது கண்களை கட்டிக் கொண்டு நகரின் முக்கிய வீதி வழியாக 2.6 கிலோ மீட்டர் தூரத்தை 17 நிமிடம் 11 நொடிகளில் கடந்து சென்று சாதனை படைத்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.