.

Pages

Saturday, August 31, 2019

பட்டுக்கோட்டையில் TNTJ சார்பில் இரத்த தானம் முகாம் (படங்கள்)

பட்டுக்கோட்டை, ஆக.31
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பட்டுக்கோட்டை கிளை மற்றும் தஞ்சை அரசு மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இரத்த தானம், இரத்த வகை கண்டறிதல் முகாம் மற்றும் இலவச மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி  பட்டுக்கோட்டை பள்ளிவாசல் தெரு  நகராட்சி நடுநிலைப் பள்ளியில் இன்று சனிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட மருத்துவ அணி செயலாளர் ஹாஜா ஜியாவுதீன் தலைமை வகித்தார். அவ்வமைப்பின் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் அதிரை கே.ராஜிக் முகமது, மாவட்டச் செயலாளர் வல்லம் பாட்ஷா, மாவட்ட துணைச் செயலாளர் ஆவணம் ரியாஸ் மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் பாஸ்கர் கலந்துகொண்டார். மேலும், தொழில் அதிபர் எஸ்.ஆர் ரகு, சமூக ஆர்வலர் ஏ.கே குமார், கலாம் நண்பர்கள் மாநில ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன், முஸ்லிம் பள்ளி தலைமை ஆசிரியை வைரமணி மற்றும் அவ்வமைப்பின் மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகள் கான்சாகிப், பாரூக், சித்திக், பத்ரூத்தீன், யஹ்யா மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில், 55 பேர்கள் ரத்த தானம் வழங்கினர். ரத்ததானம் வழங்கியவர்களுக்கு அரசு மருத்துவமனை சார்பில் பாராட்டுச்சான்றிதழ் வழங்கப்பட்டது.
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.