.

Pages

Sunday, September 1, 2019

பிலால் நகரில் ADT சார்பில் நடைபெற்ற இஸ்லாமிய மார்க்க விளக்கக் கூட்டம்!

அதிராம்பட்டினம், செப்.01
அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பின் சார்பில், அதிரை பிலால் நகரில் அமைந்துள்ள இஸ்லாமிய பயிற்சி மைய அரங்கில் ஆண்களுக்கான முதலாவது மார்க்க விளக்கக் கூட்டம் இனிதே நடந்தேறியது.

இந்த மார்க்க விளக்க கூட்டத்தில் சென்னையிலிருந்து வருகை தந்திருந்த மவ்லவி. ரஹ்மத்துல்லாஹ் ஃபிர்தவ்ஸி அவர்கள் கலந்து கொண்டு 'நெறியான வாழ்விற்கு வழி எது?' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள்.

இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்ட இந்நிகழ்வில் ஒவ்வொருவரும் இறையச்சத்துடன் இஸ்லாமியர்களாக, பிற மக்களுக்கு வாழ்வின் முன்னுதாரணமாக வாழ வேண்டிய அவசியம் குறித்தும், சமூக வலைத்தளங்களில் இளைஞர்களிடையே காணப்படும் அவசரப்போக்குகள் குறித்தும் அதனால் ஏற்படும் பின் விளைவுகள் குறித்தும் எச்சரிக்கப்பட்டன.

ஆண்களுக்கான இதுபோன்ற பயனுள்ள சிறப்பு மார்க்க விளக்க நிகழ்ச்சிகளை பிலால் நகர் மர்கஸில் மாதம் ஒருமுறை தொடர்ந்து நடத்திட அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பின் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதிரை அமீன்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.