அதிராம்பட்டினம் அருகே செவ்வாய்க்கிழமை மாலை நிகழ்ந்த வாகன விபத்தில் அரசுப் பள்ளிஆசிரியர்கள் இருவர் உயிரிழந்தனர்.
அதிராம்பட்டினம் அடுத்துள்ள ராஜாமேடம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்களாக பணியாற்றி வந்தவர்கள் பிரபாகரன், செந்தில் நாதன். இவர்கள் இருவரும் பட்டுக்கோட்டை நோக்கி செவ்வாய்க்கிழமை மாலை மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
மகிழங்கோட்டை அருகே வந்தபோது, எதிரில் வந்த கனரக வாகனம் மோட்டார் சைக்கிளில் மோதியதில் நிகழ்விடத்திலேயே செந்தில் நாதன் உயிரிழந்தார். கால் துண்டிக்கப்பட்ட நிலையில் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரபாகரன் ஆம்புலன்சில கொண்டு செல்லப்பட்டார். ஒரத்தநாடு தென்னமாடு - வல்லம் பிரிவு சாலையில் சென்றபோது, எதிரே மாடு வந்ததால் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்தார். இதையடுத்து, ஆம்புலன்ஸ் மரத்தில் மோதியது. தொடர்ந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பிரபாகரன் ஒரத்தநாடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதித்தபோது ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.