.

Pages

Sunday, September 15, 2019

அதிரையில் அண்ணா பிறந்தநாள் விழா ~ திமுகவினர் உற்சாகக் கொண்டாட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், செப்.15
பேரறிஞர் அண்ணாவின் 111 வது பிறந்த நாள் தமிழகமெங்கும் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை காலை திமுக அதிரை பேரூர் சார்பில், அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் செயலர் இராம. குணசேகரன் தலைமை வகித்தார். அக்கட்சியின், மூத்த உறுப்பினர் ஹாஜி முகமது பாருக், பட்டுக்கோட்டை (மேற்கு) ஒன்றிய செயலாளர் பா.இராமநாதன் ஆகியோர் திமுக கொடியேற்றி வைத்தனர், அண்ணா படத்துக்கு அவைத்தலைவர் ஜெ.சாகுல் ஹமீது மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் கட்சியினர், அதிராம்பட்டினம் திமுக அலுவலகத்திலிருந்து பேரணியாக புறப்பட்டுசென்று, அதிரை ஈஸ்ட் கோஸ்ட் சாலை, காலேஜ் முக்கம், வண்டிப்பேட்டை, பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில் ஆகிய 5 இடங்களில் உள்ள திமுக கொடிக்கம்பங்களில் கொடியேற்றி வைத்து, அனைவருக்கும் இனிப்பு வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில், அக்கட்சியின் அதிரை பேரூர் துணைச்செயலாளர் ஏ.எம்.ஒய் அன்சர்கான், பொருளாளர் கோடி முதலி, திமுக மாவட்ட பிரதிநிதிகள் எம். பகுருதீன், இன்பநாதன், ஒன்றிய பிரதிநிதி முல்லை ஆர்.மதி,  இணைச் செயலாளர் தில்லை நாதன், மாளியாக்காடு ஊராட்சிமன்ற முன்னாள் தலைவர் ரமேஷ், சேன்டாக்கோட்டை மனோகரன், தொக்காலிகாடு சாமிநாதன், பாண்டியன், பொன்.ரமேஷ், மீனவரணி பொறுப்பாளர் கோடி நாகராஜ், முத்துராமன், இராமநாதன் உள்ளிட்ட திமுகவினர் பலர் கலந்துகொண்டனர்.
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.