.

Pages

Monday, September 30, 2019

ஒரு மழைக்கே வெள்ளக்காடான பிலால் நகர் (படங்கள்)

அதிரை நியூஸ்:செப்.30
வருடாவருடம் பிலால் நகர் மக்கள் துன்பங்களை அனுபவிக்க வேண்டுமென்பது அரசு விதியா? என தெரியவில்லை.

இன்று அதிகாலை முதல் பெய்த கனமழையில் பிலால் நகர் கிட்டதட்ட முழங்கால் அளவு நீரில் மிதக்கின்ற நிலையில் இன்னும் மழைக்காலம் எஞ்சியுள்ளதால் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர் பிலால் நகர்வாசிகள்.

பிலால் நகர் என்பதற்கு பதில் அரசு நிர்வாகத்தால் கைவிடப்பட்ட "அனாதை நகர்' என அழைப்பதே சாலப்பொருத்தம். ஏரிப்புறக்கரை ஊராட்சி அதிகாரிகள், பட்டுக்கோட்டை ஒன்றிய ஊராட்சித்துறை அதிகாரிகள் எல்லோருக்கும் வரிவசூல் செய்யும் போது மட்டுமே ஞாபகத்தில் வந்து செல்லும் அவலநிலை இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு தொடரும் என தெரியவில்லை.

பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி.சேகர் அவர்களும் இதர ஆளுங்கட்சி பிரமுகர்களும் உடனடி கவனம் செலுத்தி பிலால் நகரின் பிரதான சாலையை முறையான வடிகால் வசதியுடன் உயர்த்தி தார் சாலையாக அமைத்து தர வேண்டும்.

பல வருட தொடர் கோரிக்கையான செடியன்குளம் வடிகால் வாய்க்காலில் அமைந்துள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்றி முன்புபோல் நீர் தடங்களின்றி செய்னாங்குளத்திற்குள் செல்லவும் வழியேற்படுத்த வேண்டும் இல்லையேல் மழைநீரும் செடியங்குள நீரும் வழிந்தோடும் போது பிலால் நகர் மக்கள் இன்னொரு கஜா புயல்கால துன்பங்களை சந்திக்க நேரிடும்.

அதிரை அமீன்
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.