.

Pages

Wednesday, September 18, 2019

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட்டம்!

அதிரை நியூஸ்: செப்.18
அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 70 வது மாதாந்திரகூட்டம் கடந்த 13-09-2019 அன்று ரியாத்மாநகர் ஹாராவில் இனிதே நடைபெற்றது.     

நிகழ்ச்சி நிரல்:
கிராஅத்            முகமது சித்திக் (உறுப்பினர்)
முன்னிலை     S.சர்புதீன் (தலைவர்)
வரவேற்ப்புரை அபூபக்கர் (பொருளாளர்)
சிறப்புரை        A.M அஹ்மது ஜலில் (செயலாளர்)                           
மாதஅறிக்கை மன்சூர் ஷேக் (துணை செயலாளர்)
நன்றியுரை     A. சாதிக் அகமது  (இணைத்தலைவர்)

தீர்மானங்கள்:
1. அல்ஹம்துலில்லாஹ் இவ்வருடம் ABM-ன் குர்பானி திட்டத்தில் பைத்துல்மால் தலைமையகம் மிகவும் சிறப்பாக பணியாற்றி நல்லதொரு இலாபகரமாக பொருளாதார தொகையை ஈன்று அதன் மூலம் அதிரை ஏழை எளிய மக்களின் சேவை திட்டத்திற்கான பங்களிப்பை செலுத்திய
அனைவருக்கும் அமர்வில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

2. WELFARE CREDIT SYSTEM  விசயமாக அதன் முழு விளக்கங்களையும் தெளிவுபடுத்தப்பட்டு விருப்பமுள்ள சகோதரர்கள்; பொறுப்புதாரிகளிடம் தங்களின் பெயர்களை பதிவுசெய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

3.AGRA அமைப்பின் சேவையை பாராட்டியதோடு அதன் பொறுப்புத்தாரியுடன் தொடர்புகொண்டு நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்ததுடன் அதன் முழுவிபரங்களையும் அறிந்து நிவர்த்தி செய்ய வேண்டியதை விரைவில் நிவர்த்தி செய்யுமாறு அமர்வில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

4. புதிதாக துவங்கப்பட்ட கத்தார் ABM-கிளைக்கு, ரியாத் ABM-கிளை சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதுடன் இதுபோன்று பல நாடுகளிலும் புதிய கிளைகளை உருவாக்க வேண்டி அமர்வில் தீர்மானம் போடப்பட்டது.

5. கடந்த 10 ஆண்டுகள் சவுதி அரேபியாவில் பணிபுரிந்து முடித்துவிட்டு தாயகம் சென்ருறிருக்கும் ஜம்ரூத் முகமது அவர்கள் ரியாத் பைத்துல்மால் ஆரம்ப துவக்கத்திலிருந்து  உறுப்பினராக இருந்து நல்ல ஒத்துழைப்பும் ஆதரவும் தந்துள்ளார். அவருடைய பணிக்காக வாழ்த்துக்களையும் நன்றியும் இந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

6. இன்ஷா அல்லாஹ் அடுத்த அமர்வு 11-10-2019 அன்று நடைபெறும்.

இப்படிக்கு,
அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.