அதிராம்பட்டினம், செப்.21
அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதியில் பொது சுகாதாரப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், பேரூராட்சிகள் உதவி இயக்குநர் குற்றாலிங்கம் அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதியில் (செப்.19) வியாழக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டு, மழை காலங்களில் பொது சுகாதாரப் பணிகள் எவ்வித தொய்வின்றி நடைபெறவும், டெங்கு நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட அறிவுறுத்தியதின் பேரில், அதிராம்பட்டினம் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் கே.அன்பரசன் மேற்பார்வையில், அதிராம்பட்டினம் பேரூராட்சியின் அனைத்து வார்டு பகுதிகளில் சாலையோரங்களில் தேங்கி நின்ற மழை நீர் அகற்றுதல், கழிவு நீர் வடிகால் தூய்மைப் படுத்தல், கிருமி நாசினி மருந்துகள் தெளித்தல், கொசு ஒழிப்பு புகை மருந்து தெளித்தல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில், பட்டுக்கோட்டை சாலையில் அமைந்துள்ள 10 லட்சம் லிட்டர் கொள்ளளவைக் கொண்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி சுத்தப்படுத்தி குளோரினேஷன் செய்யும் பணி அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலர் எல்.ரமேஷ் மேற்பார்வையில், இன்று சனிக்கிழமை காலை நடைபெற்றது. இதில், 10 க்கும் மேற்பட்ட பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.
அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதியில் பொது சுகாதாரப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், பேரூராட்சிகள் உதவி இயக்குநர் குற்றாலிங்கம் அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதியில் (செப்.19) வியாழக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டு, மழை காலங்களில் பொது சுகாதாரப் பணிகள் எவ்வித தொய்வின்றி நடைபெறவும், டெங்கு நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட அறிவுறுத்தியதின் பேரில், அதிராம்பட்டினம் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் கே.அன்பரசன் மேற்பார்வையில், அதிராம்பட்டினம் பேரூராட்சியின் அனைத்து வார்டு பகுதிகளில் சாலையோரங்களில் தேங்கி நின்ற மழை நீர் அகற்றுதல், கழிவு நீர் வடிகால் தூய்மைப் படுத்தல், கிருமி நாசினி மருந்துகள் தெளித்தல், கொசு ஒழிப்பு புகை மருந்து தெளித்தல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில், பட்டுக்கோட்டை சாலையில் அமைந்துள்ள 10 லட்சம் லிட்டர் கொள்ளளவைக் கொண்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி சுத்தப்படுத்தி குளோரினேஷன் செய்யும் பணி அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலர் எல்.ரமேஷ் மேற்பார்வையில், இன்று சனிக்கிழமை காலை நடைபெற்றது. இதில், 10 க்கும் மேற்பட்ட பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.