.

Pages

Thursday, September 19, 2019

நிலத்தடி நீர் மாசுபாடு, நீர்மட்டம் அதிகரிப்பது குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம்!

அதிராம்பட்டினம், செப். 19
காதிர் முகைதீன் கல்லூரி தேசிய மாணவர் படை (என்.சி.சி) சார்பில் நிலத்தடி நீர் மாசுபாடு மற்றும் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிப்பது குறித்து விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சி ஏரிப்புறக்கரை ஊராட்சி பிலால் நகரில் வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில், 50 க்கும் மேற்பட்ட காதிர் முகைதீன் கல்லூரி தேசிய மாணவர் படை (என்.சி.சி) மாணவ, மாணவிகள், நிலத்தடி நீர் எவ்வாறு மாசுபடுகிறது?, அவற்றை எவ்வாறு தடுக்கலாம் என்பது பற்றியும், நிலத்தடி நீர் மட்டம் குறையாமல் பாதுகாக்கும் வழிமுறைகள் மற்றும் நீர் மட்டம் உயர்த்தும் வழிமுறைகள், மழை நீர் சேகரிப்பு உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகித்தும், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு சென்று விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை, கல்லூரி தேசிய மாணவர் படை பொறுப்பு அலுவலர் பேராசிரியர் எஸ்.அப்பாஸ் செய்திருந்தார்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.