.

Pages

Tuesday, September 17, 2019

பட்டுக்கோட்டை நகராட்சியில் ரூ.2.78 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகள் தொடக்கம்!

பட்டுக்கோட்டை, செப். 17
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை நகராட்சியில் ரூ.2.78 கோடி மதிப்பீட்டில் தூய்மை இந்தியா இயக்கம், நகர்புற வாழ்வாதார திட்டம் மற்றும் குடிநீர் திட்டப்பணிகளை மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம் முன்னிலையில், வேளாண்மைத் துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு இன்று(17.09.2019) தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை தலைமை வகித்தார்.

பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தூய்மை இந்தியா இயக்கம் சார்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை தரம்பிரித்திட  3 இடங்களில் தலா ரூபாய் 30 லட்சம் மதிப்பீட்டில் சிறுஉரக்குடில்கள், மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம்பிரித்து சேகரம் செய்திட ரூபாய் 50.40 லட்சம் மதிப்பீட்டில் 9 இலகு ரக வாகனங்கள் மற்றும் ரூபாய் 30.60 லட்சம் மதிப்பீட்டில் 17 பேட்டரி வாகனங்கள், தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் பட்டுக்கோட்டை நகராட்சி வார்டு எண்-23, அண்ணாநகர் பிரதான சாலையில் ரூபாய் 4.50 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட வீடற்றோர்கான தங்குமிடம், பட்டுக்கோட்டை நகராட்சி வார்டு எண் 7 தட்டான்குளம் பகுதி நேருநகரில் ரூபாய் 80 லட்சம் மதிப்பீட்டில் 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி என மொத்தம் ரூ.2.78 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகளை திறந்து வைத்து மாண்புமிகு வேளாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் பேசியதாவது :-
மாண்புமிகு அம்மா அவர்களின் வழியில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொற்கால ஆட்சி நடத்தி வருகிறார். தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. முதலமைச்சர் அவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று ரூபாய் 8000 கோடிக்கு மேல் முதலீடுகளை தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகள் வளர்ச்சி அடைவதற்கு தேவையான திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு பொதுமக்கள் என்றென்றும் உறுதுணையாக இருக்க வேண்டும். இவ்வாறு  வேளாண்மைத்துறை அமைச்சர் பேசினார்.

மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம் பேசியதாவது:-
பட்டுக்கோட்டை நகராட்சி 1965ம் ஆண்டு நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு, தற்போது 55ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. பல உயர்ந்த மனிதர்களை உருவாக்கிய ஊர் பட்டுக்கோட்டையாகும். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் ஆகியோரின் ஆட்சி காலங்களில் பட்டுக்கோட்டைக்கு தேவையான அனைத்து வளர்ச்சி திட்டங்களும் சிறந்த முறையில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மாநிலங்களவை உறுப்பினர் பேசினார்.

தொடர்ந்து, பட்டுக்கோட்டை நகராட்சியில் 21174 குடியிருப்புகளில் 275 வீடுகளில் மக்கும் குப்பைகளை கொண்டு வீட்டில் உரக்குழி அமைத்து உரம் தயாரிப்பதில் சிறப்பாக செயல்படுத்தி மற்றும் பட்டுக்கோட்டை நகராட்சியில் உள்ள 21174 குடியிருப்புகளில் 15,437 குடியிருப்புகளில் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து  கொடுப்பவர்களில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட 6 நபர்களுக்கு தலா ஒரு கிராம் தங்க நாணயங்களையும், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பை சிறப்பாக செயல்படுத்திய டாக்டர்.தமிழரசன் என்பவருக்கும், அரசு குளங்களை சுத்தப்படுத்தி தூர்வாரிய தன்னார்வ தொண்டு அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகளுக்கும் வேளாண்மைத்துறை அமைச்சர் சால்வை அணிவித்து கவுரவித்தார்.

இந்நிகழ்ச்சியில் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி.சேகர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன், தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றிய தலைவர் காந்தி, முன்னாள் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் மோகன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன், ராஜேந்திரன், முன்னாள் தென்னை வளர்ச்சிக்குழு உறுப்பினர் மலை அய்யன், பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர்(பொ) பாஸ்கர், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.