.

Pages

Sunday, September 15, 2019

பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா!

அதிராம்பட்டினம், செப்.15
பசுமையை வலியுறுத்தி அதிராம்பட்டினம் அடுத்துள்ள புதுக்கோட்டை உள்ளுர் பிரிலியண்ட் சி.பி.எஸ்.இ பள்ளி, பட்டுக்கோட்டை லயன்ஸ் சங்க குயின் சிட்டி சார்பில், அதிராம்பட்டினம் ~ சேண்டாக்கோட்டை 10 கிலோ மீட்டர் தூரம் வரையிலான சாலையோர இருபுறங்களில் மரக்கன்றுகள் நடும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, பள்ளித்தாளாளர் வீ.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். பட்டுக்கோட்டை லயன்ஸ் சங்க குயின் சிட்டி தலைவர் முத்துக்குமரன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி சேகர் எம்.எல்.ஏ, கலந்துகொண்டு விழாவை தொடங்கி வைத்தார். இதில், வேங்கை, புங்கை, வாகை, ஆழமரம், அரச மரம் உள்ளிட்டவை நடப்பட்டன. மேலும், 2000 பனை விதைகள் விதைக்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், லயன்ஸ் சங்க மண்டலத் தலைவர் ரமேஷ் குமார், பட்டுக்கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் பி.சுப்ரமணியன், தென்னை வாரிய உறுப்பினர் மலை அய்யன், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், லயன்ஸ் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.