அதிராம்பட்டினம், செப்.18
அதிராம்பட்டினம் அருகே பழமை வாய்ந்த சிலை கண்டெடுப்பை அடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன். மாணிக்கவேல் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதிராம்பட்டினம் அருகில் உள்ள வள்ளிகொல்லைக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம். இவர் ஒரத்தநாடு பொதுப்பணித் துறையில் உதவி பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் வள்ளி கொல்லைக்காடு கிராமத்தில் கிழக்கு கடற்கரை சாலையோரம் புதிதாக வீடு கட்டி வருகிறார்.
இந்நிலையில், வீட்டின் பின்புறம் கழிவு நீர் தொட்டி கட்டுவதற்கு பள்ளம் தோண்டியபோது ஐந்து அடி ஆழத்தில் பழங்கால நடராஜர் சிலை கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்த்தபோது நடராஜர் சிலை 5 அடி உயரமும் சுமார் 300 கிலோ எடை உள்ளது தெரிந்தது. மேலும், சிலைகள் இருக்கும் தடயம் தெரிவதால் பொக்லைன் இயந்திரம் கொண்டு அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பள்ளம் தோண்டி சிலைகள் உள்ளதா என ஆய்வு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் சம்பவ இடத்துக்கு வந்து கண்டெடுக்கப்பட்ட சிலையை பார்வையிட்டார். மேலும், இப்பகுதியில் அடுத்தடுத்து சிலைகள் உள்ளதா என கண்டறிய மெட்டல் டிடெக்டர் வரவழைக்கப்பட உள்ளதாகவும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதில் சிலை கடத்தல் பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல், ஏடிஎஸ்பிக்கள் ராஜாராம், மலைசாமி, டிஎஸ்பிக்கள் சந்திரசேகரன், முகேஷ், எஸ்.ஐ ராஜேஸ்குமார், ஆர்ஐ ரவிச்சந்திரன், அறநிலையத் துறை பட்டுக்கோட்டை சரக ஆய்வாளர் கருணாநிதி, செயல் அலுவலர் சண்முகம் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.
மேலும் கண்டெடுக்கப்பட்ட சிலையை அதிராம்பட்டினம் அபய வரதேஸ்வரர் ஆலயத்திற்கு கொண்டு வரப்பட்டு பாதுகாக்கப்பட்ட அறையில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு பணிக்காக ஏடிஎஸ்பி தலைமையில் 20 க்கும் மேற்பட்ட தடுப்பு பிரிவு போலீஸார் இரவு பகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த கண்டெடுக்கப்பட்ட சிலையை பார்க்க பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமியை தரிசித்து வருகின்றனர். அனைத்து அறநிலையத் துறை அதிகாரிகள் கோயிலில் முகாமிட்டுள்ளனர்.
அதிராம்பட்டினம் அருகே பழமை வாய்ந்த சிலை கண்டெடுப்பை அடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன். மாணிக்கவேல் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதிராம்பட்டினம் அருகில் உள்ள வள்ளிகொல்லைக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம். இவர் ஒரத்தநாடு பொதுப்பணித் துறையில் உதவி பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் வள்ளி கொல்லைக்காடு கிராமத்தில் கிழக்கு கடற்கரை சாலையோரம் புதிதாக வீடு கட்டி வருகிறார்.
இந்நிலையில், வீட்டின் பின்புறம் கழிவு நீர் தொட்டி கட்டுவதற்கு பள்ளம் தோண்டியபோது ஐந்து அடி ஆழத்தில் பழங்கால நடராஜர் சிலை கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்த்தபோது நடராஜர் சிலை 5 அடி உயரமும் சுமார் 300 கிலோ எடை உள்ளது தெரிந்தது. மேலும், சிலைகள் இருக்கும் தடயம் தெரிவதால் பொக்லைன் இயந்திரம் கொண்டு அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பள்ளம் தோண்டி சிலைகள் உள்ளதா என ஆய்வு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் சம்பவ இடத்துக்கு வந்து கண்டெடுக்கப்பட்ட சிலையை பார்வையிட்டார். மேலும், இப்பகுதியில் அடுத்தடுத்து சிலைகள் உள்ளதா என கண்டறிய மெட்டல் டிடெக்டர் வரவழைக்கப்பட உள்ளதாகவும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதில் சிலை கடத்தல் பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல், ஏடிஎஸ்பிக்கள் ராஜாராம், மலைசாமி, டிஎஸ்பிக்கள் சந்திரசேகரன், முகேஷ், எஸ்.ஐ ராஜேஸ்குமார், ஆர்ஐ ரவிச்சந்திரன், அறநிலையத் துறை பட்டுக்கோட்டை சரக ஆய்வாளர் கருணாநிதி, செயல் அலுவலர் சண்முகம் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.
மேலும் கண்டெடுக்கப்பட்ட சிலையை அதிராம்பட்டினம் அபய வரதேஸ்வரர் ஆலயத்திற்கு கொண்டு வரப்பட்டு பாதுகாக்கப்பட்ட அறையில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு பணிக்காக ஏடிஎஸ்பி தலைமையில் 20 க்கும் மேற்பட்ட தடுப்பு பிரிவு போலீஸார் இரவு பகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த கண்டெடுக்கப்பட்ட சிலையை பார்க்க பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமியை தரிசித்து வருகின்றனர். அனைத்து அறநிலையத் துறை அதிகாரிகள் கோயிலில் முகாமிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.