.

Pages

Saturday, September 14, 2019

நீர் நிலை மேம்பாடு பணிக்கு சிஷ்வா அமைப்பு ரூ.50 ஆயிரம் நிதி உதவி!

அதிராம்பட்டினம், செப்.14
அதிராம்பட்டினம் சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் ஓர் அங்கம் சிஷ்வா அமைப்பு. இந்த அமைப்பின் மூலம் பல்வேறு சமூகப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதிகளின் நீர் நிலை பாதுகாப்பு, அதன் பராமரிப்பு, அவற்றை மேம்படுத்துதல் போன்ற பணிகளுக்காக தொடங்கிய அமைப்பு 'நீர் நிலை பாதுகாப்பு அறக்கட்டளை. இந்த அமைப்பு முன்னெடுத்து செல்லும் அடுத்தக்கட்ட மேம்பாடு பணிகளுக்காக சிஷ்வா அமீரக கிளை நிர்வாகிகள் மூலம் திரட்டப்பட்ட ரூ.50 ஆயிரம் நிதி உதவியை, சம்சுல் இஸ்லாம் சங்கத் தலைவர் ஹாஜி எம்.எஸ்.எம் முகமது அபூபக்கர் தலைமையில், சங்க செயலாளர் பேராசிரியர் ஹாஜி எம்.ஏ அப்துல் காதர், மற்றும் அதன் நிர்வாகிகள் அகமது மன்சூர், அப்துல் ரஹீம், அன்சாரி, சிஷ்வா அமைப்பின் பன்னாட்டுத் தலைவர் எம்.எஸ்.எம் சபீர் அகமது ஆகியோர் முன்னிலையில், நீர் நிலை பாதுகாப்பு அறக்கட்டளை நிறுவனத் தலைவர் எஸ்.எச் அஸ்லம், பொருளாளர் ஏ.எஸ் அகமது ஜலீல் ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.