.

Pages

Tuesday, September 24, 2019

காதிர் முகைதீன் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் தொடக்கம்!

அதிராம்பட்டினம், செப்.24
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் தொடக்க விழா இன்று (செப்.24) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பட்டுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் ஆர்.ஜெயபால் முகாமிற்கு தலைமை வகித்து உரை நிகழ்த்தினார். முகாமில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தஞ்சாவூர் மாவட்ட பசுமை படை ஒருங்கிணைப்பாளர் பா.ராம் மனோகர் முகாமை தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார்.

காதிர் முகைதீன் கல்லூரி முதல்வர் ஏ. முகமது முகைதீன், மாவட்ட நாட்டு நலப்பணி திட்ட தொடர்பு அலுவலர் க.இராஜசேகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.

விழாவையொட்டி, பள்ளி மாணவர்கள் பள்ளி வளாகத்தில் தூய்மை படுத்தும் பணியில் ஈடுபட்டனர். பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டன. இந்த முகாமில் நாட்டு நலப்பணி திட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

முன்னதாக, காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஏ.எல் அசரப் அலி வரவேற்றார். முடிவில், காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை எம்.சுராஜ் நன்றி கூறினார். விழா ஏற்பாட்டினை, நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் எஸ். நாகராஜன், கே.அனுராதா ஆகியோர் செய்திருந்தனர். முகாம் இன்று செப்.24 ல் தொடங்கி, வரும் செப்.30 ந் தேதி வரை நடைபெற உள்ளது.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.