.

Pages

Monday, September 30, 2019

அதிரையில் நவீன முறையில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம், பாதாள சாக்கடைத் திட்டம் நிறைவேற்றக் கோரி, எம்.எல்.ஏ சி.வி சேகரிடம் AMS நிர்வாகிகள் மனு!

அதிராம்பட்டினம், செப்.30
அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதியில் சுகாதார சீர்கேட்டை தவிர்க்க நவீன முறையில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்தக் கோரியும், பாதாள சாக்கடைத்திட்டம் நிறைவேற்றக் கோரியும் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி சேகர் எம்.எல்.ஏ விடம் அதிரை மேம்பாடு சங்கமம் சார்பில் அதன் தலைவர் எம்.எஸ்.எம் முகமது யூசுப், ஏ.ஜெ அஸ்ரப் அலி ஆகியோர் இன்று திங்கட்கிழமை காலை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.  அப்போது, அதிராம்பட்டினம் பேரூராட்சி முன்னாள் துணை சேர்மன் ஏ.பிச்சை, அதிராம்பட்டினம் கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் எம்.ஏ முகமது தமீம், முத்துக்கருப்பன், சங்கர், அன்வர் ஆகியோர் உடனிருந்தனர்.

அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பது:
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அதிராம்பட்டினம் தேர்வு நிலைப் பேரூராட்சி  21 வார்டுகளில், சுமார் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், தினமும் 10 டன் குப்பை  வரை சேகரமாகிறது. இவற்றை, பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள், சுய உதவிக்குழுவினர் என சுமார் 60 பேர் வரை அப்புறப்படுத்தி வருகின்றனர். குடியிருப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இப்பகுதியில் துப்புரவு பணியாளர்கள் எண்ணிக்கை மிகக்குறைவாக உள்ளது. மேலும், அதிராம்பட்டினம் பகுதிகளில் அன்றாடம் சேகரமாகும் குப்பைகளை இருப்பு வைக்கும் கிடங்கில் போதுமான இட வசதி இல்லை. இதனால், அதிராம்பட்டினம் பிரதான சாலைகளில் தேங்கும் குப்பைகளை ஏற்றிச்சென்று கிடங்கில் கொட்டுவதில் சுணக்கம் ஏற்படுகிறது. சாலைகளில் சிதறிக்கிடக்கும் குப்பைக் கழிவுகளை ஆடு, மாடு, நாய்கள் கிளறுவதன் மூலம் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு, அதிராம்பட்டினம் பகுதியில் 500 க்கும் மேற்பட்டோர் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சல் ஏற்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்துக்கொண்டனர். இதில், சிலர் தீவிர சிகிச்சையும் எடுத்துக்கொண்டனர்.

எனவே, குப்பைக் கிடங்கை போதுமான இட வசதியில் விரிவாக்கம் செய்தோ அல்லது மாற்று இடத்தில் குப்பை கிடங்கு அமைத்து தர வேண்டும்,  அதிராம்பட்டினம் பேரூர் பகுதி துப்புரவுப் பணிக்கான ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதியில் அன்றாடம் சேகரமாகும் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரித்து நவீன முறையிலான மாற்றுத் திட்டம் மூலம் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த வேண்டுமெனவும், இத்திட்டம் வெற்றிகரமாக நடைமுறைக்கு கொண்டுவருவதற்கு, மாவட்ட நிர்வாகம் மற்றும் அதிரை பேரூர் நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட நாங்கள் தயாராக உள்ளாத குறிப்பிட்டு இருந்தனர்.

அதிராம்பட்டினத்தில் பாதாள சாக்கடைத் திட்டம்:
அதிராம்பட்டினம் தேர்வுநிலை பேரூராட்சி 21 வார்டுகளை உள்ளடக்கியது. 12.80 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கொண்டது. இப்பகுதியில், தற்போது சுமார் 70 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். கடந்த 2011 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா, அதிராம்பட்டினம் பேரூராட்சியில் ரூ.23.73 கோடி மதிப்பீட்டில் புதிதாக பாதாள சாக்கடை திட்டத்தை அறிவித்து இருந்தார்.  இதன் பின்னர், சில பல காரணங்களால் மற்றொரு பகுதிக்கு இந்த திட்டம் கொண்டு செல்லப்பட்டு நிறைவேற்றப்பட்டது. எனவே, அதிராம்பட்டினம் பேரூர் பகுதியில் அதிகரித்து வரும் மக்கள் தொகை மற்றும் வருவாய் ஆகியவற்றை கருத்தில் கொண்டு  அம்மா அறிவித்த இந்த திட்டத்தை உடனடியாக நிறைவேற்றி தர வேண்டுமென மனுவில் கூறப்பட்டு இருந்தது. மனுவை பெற்றுக்கொண்ட எம்.எல்.ஏ சி.வி சேகர் கோரிக்கை மீது உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார்.
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.