அதிராம்பட்டினம், செப்.18
அதிராம்பட்டினம் பேரூராட்சி ஊழியர்களுக்கான கண் பரிசோதனை முகாம் இன்று புதன்கிழமை காலை நடைபெற்றது.
அதிராம்பட்டினம் அரிமா சங்கம் சார்பில் நடத்தப்பட்ட முகாமுக்கு சங்கத் தலைவர் எம். அப்துல் ஜலீல் தலைமை வகித்தார். செயலாளர் எம்.நிஜாமுதீன், பொருளாளர் எஸ்.எம் முகமது முகைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமை, அதிராம்பட்டினம் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் கே.அன்பரசன் தொடங்கி வைத்தார்.
தஞ்சாவூர் வாசன் கண் மருத்துவமனை மருத்துவர்கள் முகாமில் பங்கேற்று, அதிராம்பட்டினம் பேரூராட்சியில் பணிபுரியும் ஊழியர்கள், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்ட 73 பேருக்கு கண் பரிசோதனை செய்து, உரிய மருத்துவ ஆலோசனை வழங்கினர். இதில், 3 பேருக்கு ஐ.ஓ.எல் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர். மேலும், 27 பேருக்கு கிட்டப்பார்வை குறைபாடும், 12 பேருக்கு தூரப்பார்வை குறைபாடும் கண்டறியப்பட்டன.
இம்முகாமில், அதிராம்பட்டினம் அரிமா சங்க நிர்வாகிகள் எஸ்.ஏ அப்துல் ஹமீது, எம்.அப்துல் ரஹ்மான், என்.உதயகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முகாம் ஏற்பாட்டினை தஞ்சாவூர் வாசன் கண் மருத்துவமனை முகாம் ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் செய்திருந்தார்.
அதிராம்பட்டினம் பேரூராட்சி ஊழியர்களுக்கான கண் பரிசோதனை முகாம் இன்று புதன்கிழமை காலை நடைபெற்றது.
அதிராம்பட்டினம் அரிமா சங்கம் சார்பில் நடத்தப்பட்ட முகாமுக்கு சங்கத் தலைவர் எம். அப்துல் ஜலீல் தலைமை வகித்தார். செயலாளர் எம்.நிஜாமுதீன், பொருளாளர் எஸ்.எம் முகமது முகைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமை, அதிராம்பட்டினம் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் கே.அன்பரசன் தொடங்கி வைத்தார்.
தஞ்சாவூர் வாசன் கண் மருத்துவமனை மருத்துவர்கள் முகாமில் பங்கேற்று, அதிராம்பட்டினம் பேரூராட்சியில் பணிபுரியும் ஊழியர்கள், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்ட 73 பேருக்கு கண் பரிசோதனை செய்து, உரிய மருத்துவ ஆலோசனை வழங்கினர். இதில், 3 பேருக்கு ஐ.ஓ.எல் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர். மேலும், 27 பேருக்கு கிட்டப்பார்வை குறைபாடும், 12 பேருக்கு தூரப்பார்வை குறைபாடும் கண்டறியப்பட்டன.
இம்முகாமில், அதிராம்பட்டினம் அரிமா சங்க நிர்வாகிகள் எஸ்.ஏ அப்துல் ஹமீது, எம்.அப்துல் ரஹ்மான், என்.உதயகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முகாம் ஏற்பாட்டினை தஞ்சாவூர் வாசன் கண் மருத்துவமனை முகாம் ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் செய்திருந்தார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.