.

Pages

Wednesday, September 18, 2019

AAF பிரதிநிதிகள் எம்.எல்.ஏ சி.வி சேகருடன் சந்திப்பு (படங்கள்)

பட்டுக்கோட்டை, செப்.18
அமெரிக்கா அதிரையர் கூட்டமைப்பு (AAF) பிரதிநிதிகள் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி சேகர் எம்.எல்.ஏ வை இன்று புதன்கிழமை காலை அவரது அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களை AAF அமைப்பின் சார்பில், அதன் நிர்வாகிகள் ஷிப்லி, அப்துல் கபூர், மீயண்ணா சலீம் உள்ளிட்டோர் கலிபோர்னியா மாகாணம் சான் ஹொசே, ஃபேர்மோன்ட் ஹோட்டலில் சந்தித்து அதிராம்பட்டினம் பொதுநலன் சார்ந்த 7 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.

அதன் தொடர்ச்சியாக, பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வழக்குரைஞர் சி.வி சேகர் எம்.எல்.ஏ வை அவரது அலுவலகத்தில் அமெரிக்கா அதிரையர் கூட்டமைப்பு (AAF) பிரதிநிதிகள் பேராசிரியர் எம்.ஏ  அப்துல் காதர், எம்.எஸ்.எம் முகமது யூசுப், சேக்கனா எம்.நிஜாமுதீன் ஆகியோர் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர். அப்போது, அதிமுக அதிராம்பட்டினம் பேரூர் முன்னாள் துணைத் தலைவர் ஏ.பிச்சை, அதிராம்பட்டினம் கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் எம்.ஏ முகமது தமீம் ஆகியோர் உடனிருந்தனர்.

மனுவில்,  தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதி பொதுமக்களின் நலன் கருதி, அதிராம்பட்டினத்தில் 110/11 KVA துணை மின் நிலையம் அமைக்கவும், அதிராம்பட்டினம் குடிநீர் தேவையை போக்க பம்பிங் (இறைவை) நீர் திட்டத்தை உடனடியாக செயல்படுத்தவும்,  அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் 24 மணி நேர சேவையை தொடங்கவும், அதிராம்பட்டினத்தில் தமிழக அரசின் 108 ஆம்புலன்ஸ் சேவை, அதிராம்பட்டினத்தில் பாதாள சாக்கடைத் திட்டம், அதிராம்பட்டினத்தில் தீயணைப்பு நிலையம், அதிராம்பட்டினத்தை புதிய தாலுகாவாக தரம் உயர்த்தி அறிவிப்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகள் இடம்பெற்றுள்ளன.

மேலும், பழுதடைந்த அதிராம்பட்டினம் ~ மகிழங்கோட்டை கிராம இணைப்புச் சாலை சீரமைப்பு, அதிராம்பட்டினத்திலிருந்து மதுக்கூர் வழியாக மன்னார்குடி மற்றும் சென்னை, மதுரை ஆகிய ஊர்களுக்கு நேரடி அரசுப் பேருந்து இயக்கவும், அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையிலிருந்து ரயில் நிலையம் வரையிலான சுமார் 650 மீட்டர் நீளம் கொண்ட சாலையை சீரமைக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டன.

மனுவை பெற்றுக்கொண்ட எம்.எல்.ஏ சி.வி சேகர் மனுவில் கூறியிருக்கும் கோரிக்கைகள் நிறைவேற தாம் உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக பிரதிநிதிகளிடம் தெரிவித்தார்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.