.

Pages

Sunday, September 29, 2019

காதிர் முகைதீன் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு (படங்கள்)

அதிராம்பட்டினம், செப்.29
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி இயற்பியல் துறை முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி கல்லூரி அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் (பொ) எம்.முகமது முகைதீன் தலைமை வகித்து உரை ஆற்றினார்.

இயற்பியல் துறை தலைவர் பேராசிரியை ஏ. ஆயிஷா மரியம் வரவேற்றுப் பேசினார். கல்லூரி துணை முதல்வர் பேராசிரியர் எம். முகமது முகைதீன், முன்னாள் மாணவர் சங்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் எஸ்.பி கணபதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

பேராசிரியர் என்.சேகர், 'முன்னாள் மாணவர்களின் முக்கியத்துவம்' பற்றியும், பேராசிரியர் எஸ். ஞானசரவணன், மாணவர்கள் ~ ஆசிரியர்கள் நல்லுறவு குறித்தும் பேசினர்.

விழாவில், கடந்த ஆண்டுகளில் இயற்பியல் துறையில் கல்வி பயின்ற முன்னாள் மாணவர்கள் 60 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, கல்லூரி காலங்களில் நிகழ்ந்த மலரும் நினைவுகளை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டனர். நிகழ்ச்சி முடிவில், கல்லூரி இயற்பியல்துறை பேராசிரியர் ஏ.என் விக்னேஸ்வரன் நன்றி கூறினார்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.