.

Pages

Thursday, September 19, 2019

கிழக்கு கடற்கரைச் சாலை புதுப்பித்தல் பணி:பொறியாளர்கள் குழு ஆய்வு (படங்கள்)

அதிராம்பட்டினம், செப். 19
கிழக்குக் கடற்கரைச் சாலை புதுப்பித்தல் பணியை பொறியாளர்கள் குழு வியாழக்கிழமை ஆய்வு செய்தனர்.

உலக வங்கி நிதி உதவியுடன் கிழக்கு கடற்கரை சாலையான நாகப்பட்டினம் முதல் கட்டுமாவடி வரை 107.20 கிலோ மீட்டர் நீளத்திற்கான  மாநில நெடுஞ்சாலையானது, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டம் திருச்சிராப்பள்ளி கோட்டத்தின் மூலம் செயல்பட்டு வருகிறது. இதன் அடிப்படையிலான பராமரிப்பு, ஒப்பந்த அடிப்படையில் புதுக்கோட்டையைச் சேர்ந்த சாய் ஹருதம் என்பவரால் ஐந்து வருட காலத்திற்கு பராமரிக்கப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின் கீழ் நடைபெற்று வரும் 4-ஆம் ஆண்டிற்கான சாலை புதுப்பித்தல் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்தப்பணிகளை, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்ட கண்காணிப்பு பொறியாளர் செல்வி தலைமையில் பொறியாளர்கள் குழு வியாழக்கிழமை ஆய்வு செய்தனர். இதில், சாலையின் தன்மை, பணியின் தரம் ஆகியவை பரிசோதிக்கப்பட்டது. இதில் கோட்ட பொறியாளர் வெங்கடாஜலம், திட்ட மேற்பார்வை ஆலோசகர் சுந்தரம், ஒப்பந்த சாலை மேலாளர் ரவிக்குமார், உதவி கோட்ட பொறியாளர்கள் லதா, எழிலரசி மற்றும் உதவிப் பொறியாளர் சரண்யா ஆகியோர் உடனிருந்தனர்.
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.