.

Pages

Friday, September 6, 2019

அமெரிக்காவில் AAF நிர்வாகிகள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து மனு!

அதிரை நியூஸ்: செப்.06
அமெரிக்கா வாழ் அதிரையர்களின் நலன் கருதி கடந்த 2012 ஆம் ஆண்டு  தொடங்கப்பட்ட அமைப்பு அமெரிக்கா அதிரையர் கூட்டமைப்பு (AAF). இந்த அமைப்பின் மூலம் பல்வேறு சமூக நலப்பணிகள் மேற்கொள்ளபட்டு வருகின்றன.

இந்நிலையில், அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களை AAF அமைப்பின் சார்பில், அதன் நிர்வாகிகள் ஷிப்லி, அப்துல் கபூர், மீயண்ணா சலீம் உள்ளிட்டோர் கலிபோர்னியா மாகாணம் சான் ஹொசே, ஃபேர்மோன்ட் ஹோட்டலில் சந்தித்து 7 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.

மனுவில்,  தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதி பொதுமக்களின் நலன் கருதி, அதிராம்பட்டினத்தில் 110/11 KVA துணை மின் நிலையம் அமைக்கவும், அதிராம்பட்டினம் குடிநீர் தேவையை போக்க பம்பிங் (இறைவை) நீர் திட்டத்தை உடனடியாக செயல்படுத்தவும்,  அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் 24 மணி நேர சேவையை தொடங்கவும், அதிராம்பட்டினத்தில் தமிழக அரசின் 108 ஆம்புலன்ஸ் சேவை, அதிராம்பட்டினத்தில் பாதாள சாக்கடைத் திட்டம், அதிராம்பட்டினத்தில் தீயணைப்பு நிலையம், அதிராம்பட்டினத்தை புதிய தாலுகாவாக தரம் உயர்த்தி அறிவிப்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகள் இடம்பெற்றுள்ளன.

தமிழக முதல்வரிடம் AAF அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது; 
 
 
 

1 comment:

  1. நமது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து நமது ஊர் மேம்பாட்டுக்குக்காக கோரிக்கை மனு கொடுத்தமைக்கு எனது மனம் மார்ந்த நன்றியை AAF நிர்வாகிகளுக்கு தெரிவுத்துக்கொள்ளுகிறேன்.

    மேலும் இந்த கோரிக்கைகள் நிறைவேற்ற தொடர்ந்து follow-up செய்திட வேண்டுகிறன்.

    நன்றி - இங்கனம்.

    SM. ஷேக் (துபாய்)

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.