அதிராம்பட்டினம், செப்.29
நீர்நிலை பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில், நீர் வளம் காப்போம், மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேச்சுப் போட்டி, ஆய்ஷா மகளிர் அரங்கில் (செப். 28) சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியர் (ஓய்வு) எஸ்.கே.எம் ஹாஜா முகைதீன். தலைமை வகித்து, போட்டியை தொடங்கி வைத்துப் பேசினார். நீர்நிலை பாதுகாப்பு அறக்கட்டளை தலைவர் எஸ்.எச் அஸ்லம் வரவேற்றுப் பேசினார்.
இதில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 'நீர் வளம் காப்போம்', 'மழை நீர் சேகரிப்பு', 'நீராதாரம், உயிராதாரம்' ஆகிய தலைப்புகளின் கீழ், கீழோர் பிரிவில் 6,7,8,9 ஆகிய வகுப்புகளுக்கும், மேலோர் பிரிவில் 10,11,12 ஆகிய வகுப்புகளுக்கு பேச்சுப்போட்டி நடத்தப்பட்டன.
இதில், இமாம் ஷாஃபி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி, கரையூர் தெரு அரசு மகளிர் உயர் நிலைப்பள்ளி, ஈ.பி.எம்.எஸ் பள்ளி, காதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளிகள், ஆக்ஸ்போர்டு மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி, பிரிலியண்ட் சிபிஎஸ்இ மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த மொத்தம் 26 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
போட்டி நடுவர்களாக, கல்வியாளர் எஸ்.எம் நூர்முகமது, முதுகலை
ஆசிரியர்கள் ஆர். உஷா, ஏ.அஜுமுதீன் ஆகியோர் பொறுப்பேற்று நடத்தினர்.
போட்டி முடிவில், கீழோர் பிரிவில், மாணவர்கள் கே.விஷாலினி (ஆக்ஸ்போர்டு பள்ளி), ஏ. தஸ்பீஹா (ஈ.பி.எம்.எஸ் பள்ளி), ஆர்.நித்யஸ்ரீ (ஆக்ஸ்போர்டு பள்ளி) ஆகியோரும், மேலோர் பிரிவில், எச்.நஹீதா (ஈ.பி.எம்.எஸ் பள்ளி), ஏ.அருள்தேவி (ஆக்ஸ்போர்டு பள்ளி), எஸ்.சரிகா ( ஆக்ஸ்போர்டு பள்ளி) ஆகியோரும் முதல் மூன்று இடங்களைப் பெற்றனர். இவர்களுக்கு நினைவுப்பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும், போட்டியில் பங்குபெற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள், நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியினை, அவ்வமைப்பின் ஆலோசகர் மு.காதர் முகைதீன் தொகுத்தளித்தார். முடிவில், அவ்வமைப்பின் பொருளாளர் ஏ.எஸ் அகமது ஜலீல் நன்றி கூறினார். நிகழ்ச்சியில், அவ்வமைப்பின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், நீர் நிலை ஆர்வலர்கள், பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
நீர்நிலை பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில், நீர் வளம் காப்போம், மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேச்சுப் போட்டி, ஆய்ஷா மகளிர் அரங்கில் (செப். 28) சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியர் (ஓய்வு) எஸ்.கே.எம் ஹாஜா முகைதீன். தலைமை வகித்து, போட்டியை தொடங்கி வைத்துப் பேசினார். நீர்நிலை பாதுகாப்பு அறக்கட்டளை தலைவர் எஸ்.எச் அஸ்லம் வரவேற்றுப் பேசினார்.
இதில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 'நீர் வளம் காப்போம்', 'மழை நீர் சேகரிப்பு', 'நீராதாரம், உயிராதாரம்' ஆகிய தலைப்புகளின் கீழ், கீழோர் பிரிவில் 6,7,8,9 ஆகிய வகுப்புகளுக்கும், மேலோர் பிரிவில் 10,11,12 ஆகிய வகுப்புகளுக்கு பேச்சுப்போட்டி நடத்தப்பட்டன.
இதில், இமாம் ஷாஃபி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி, கரையூர் தெரு அரசு மகளிர் உயர் நிலைப்பள்ளி, ஈ.பி.எம்.எஸ் பள்ளி, காதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளிகள், ஆக்ஸ்போர்டு மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி, பிரிலியண்ட் சிபிஎஸ்இ மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த மொத்தம் 26 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
போட்டி நடுவர்களாக, கல்வியாளர் எஸ்.எம் நூர்முகமது, முதுகலை
ஆசிரியர்கள் ஆர். உஷா, ஏ.அஜுமுதீன் ஆகியோர் பொறுப்பேற்று நடத்தினர்.
போட்டி முடிவில், கீழோர் பிரிவில், மாணவர்கள் கே.விஷாலினி (ஆக்ஸ்போர்டு பள்ளி), ஏ. தஸ்பீஹா (ஈ.பி.எம்.எஸ் பள்ளி), ஆர்.நித்யஸ்ரீ (ஆக்ஸ்போர்டு பள்ளி) ஆகியோரும், மேலோர் பிரிவில், எச்.நஹீதா (ஈ.பி.எம்.எஸ் பள்ளி), ஏ.அருள்தேவி (ஆக்ஸ்போர்டு பள்ளி), எஸ்.சரிகா ( ஆக்ஸ்போர்டு பள்ளி) ஆகியோரும் முதல் மூன்று இடங்களைப் பெற்றனர். இவர்களுக்கு நினைவுப்பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும், போட்டியில் பங்குபெற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள், நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியினை, அவ்வமைப்பின் ஆலோசகர் மு.காதர் முகைதீன் தொகுத்தளித்தார். முடிவில், அவ்வமைப்பின் பொருளாளர் ஏ.எஸ் அகமது ஜலீல் நன்றி கூறினார். நிகழ்ச்சியில், அவ்வமைப்பின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், நீர் நிலை ஆர்வலர்கள், பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.