அதிராம்பட்டினம், செப்.13
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் கடந்த 83 ஆண்டுகளாக ஓதப்பட்டு வரும் புஹாரி ஷரீப் மஜ்லீஸ், கடந்த ஆக.2 ந் தேதி ஜாவியா மஜ்லீஸ் வளாகத்தில் தொடங்கி, நாளை (செப்.14) சனிக்கிழமை காலை நிறைவடைய உள்ளது.
இந்நிலையில், 39-வது நாளான இன்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிராம்பட்டினம், அல் மதரசத்துர் ரஹ்மானியா அரபிக் கல்லூரி முதல்வர் மவ்லவி கே.டி முகமது குட்டி தலைமை வகித்து, இஸ்லாமிய மார்க்க விளக்க சொற்பொழிவு ஆற்றினார். முடிவில், சிறப்பு துஆ ஓதப்பட்டன. இந்நிகழ்ச்சியில், பெண்கள் உட்பட 1500 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியின் தொடக்கமாக, இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை சுபுஹு தொழுகைக்கு பின் திக்ரூ மஜ்லீஸ் நடைபெற்றது. இதில், இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள், தொழுகையாளிகள் பலர் கலந்துகொண்டு திக்ரூ செய்தனர்.
நிகழ்ச்சியில், அதிரை ஜாவியத்துஷ் ஷாதுலியத்துல் ஃபாஸிய்யா சார்பில், அல் மதரசத்துர் ரஹ்மானியா அரபிக் கல்லூரி பேராசிரியர் மவ்லவி தேங்கை சரபுதீன் தொகுத்தளித்த 'அவ்ராது பூஞ்சோலை' எனும் தலைப்பிலான நூல் வெளியிடப்பட்டது. பிரதிகளை, அல் மதரசத்துர் ரஹ்மானியா அரபிக் கல்லூரி முதல்வர், மவ்லவி கே.டி முகமது குட்டி வெளியீட, முறையே முகமது அப்துல்லா, முகமது முகைதீன், அப்துல் ரெஜாக், அப்துல் லத்திப், அகமது கபீர் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாட்டினை, அதிராம்பட்டினம் அஜ்ஜாவியத்தூஸ் ஷாதுலியா நிர்வாகக் கமிட்டியினர் எம்.பி அபூபக்கர், டி.ஏ சேக் அலி உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் கடந்த 83 ஆண்டுகளாக ஓதப்பட்டு வரும் புஹாரி ஷரீப் மஜ்லீஸ், கடந்த ஆக.2 ந் தேதி ஜாவியா மஜ்லீஸ் வளாகத்தில் தொடங்கி, நாளை (செப்.14) சனிக்கிழமை காலை நிறைவடைய உள்ளது.
இந்நிலையில், 39-வது நாளான இன்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிராம்பட்டினம், அல் மதரசத்துர் ரஹ்மானியா அரபிக் கல்லூரி முதல்வர் மவ்லவி கே.டி முகமது குட்டி தலைமை வகித்து, இஸ்லாமிய மார்க்க விளக்க சொற்பொழிவு ஆற்றினார். முடிவில், சிறப்பு துஆ ஓதப்பட்டன. இந்நிகழ்ச்சியில், பெண்கள் உட்பட 1500 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியின் தொடக்கமாக, இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை சுபுஹு தொழுகைக்கு பின் திக்ரூ மஜ்லீஸ் நடைபெற்றது. இதில், இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள், தொழுகையாளிகள் பலர் கலந்துகொண்டு திக்ரூ செய்தனர்.
நிகழ்ச்சியில், அதிரை ஜாவியத்துஷ் ஷாதுலியத்துல் ஃபாஸிய்யா சார்பில், அல் மதரசத்துர் ரஹ்மானியா அரபிக் கல்லூரி பேராசிரியர் மவ்லவி தேங்கை சரபுதீன் தொகுத்தளித்த 'அவ்ராது பூஞ்சோலை' எனும் தலைப்பிலான நூல் வெளியிடப்பட்டது. பிரதிகளை, அல் மதரசத்துர் ரஹ்மானியா அரபிக் கல்லூரி முதல்வர், மவ்லவி கே.டி முகமது குட்டி வெளியீட, முறையே முகமது அப்துல்லா, முகமது முகைதீன், அப்துல் ரெஜாக், அப்துல் லத்திப், அகமது கபீர் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாட்டினை, அதிராம்பட்டினம் அஜ்ஜாவியத்தூஸ் ஷாதுலியா நிர்வாகக் கமிட்டியினர் எம்.பி அபூபக்கர், டி.ஏ சேக் அலி உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.