அதிராம்பட்டினம், செப்.04
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி இளங்கலை ஹோம் சயின்ஸ் (மனையியல்) சார்பில், தேசிய ஊட்டச்சத்து வார விழா விழிப்புணர்வு கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு, கல்லூரி முதல்வர் ஏ. முகமது முகைதீன் தலைமை வகித்து, ஊட்டச்சத்து பற்றிய கண்காட்சியைத் திறந்து வைத்து ஊட்டச்சத்தின் அவசியம் குறித்து விளக்கிப் பேசினார். கல்லூரி துணை முதல்வர்கள் எம். முகமது முகைதீன், என்.ஏ முகமது பாருக் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
கல்லூரி மனையியல் பிரிவு முதலாம் ஆண்டு மாணவிகள் சினேகா, அரசி ஆகியோர் 'உணவு மற்றும் ஊட்டச்சத்து', 'அழிந்து வரும் பாரம்பரிய உணவு' ஆகிய தலைப்புகளில் பேசினர்.
கண்காட்சியில், ஊட்டச்சத்து உணவுகள், காய்கறி உள்ளிட்ட இயற்கை உணவுகளை நேரடியாக வைத்தும், ஊட்டச்சத்து உணவுகளால் ஏற்படும் நன்மைகள் பற்றியும், ஊட்டச்சத்து உணவுகள் வழங்கியும் மாணவ, மாணவிகளுக்கு விளக்கி கூறப்பபட்டது.
முன்னதாக, கல்லூரிப் பேராசிரியை எஸ்.ஆரிபா வரவேற்றுப் பேசினார். பேராசிரியைகள் என். சித்ரா, வி.கானப்பிரியா ஆகியோர் தொகுத்து வழங்கினர். முடிவில், பேராசிரியை ஏ. ஆர்த்தி நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாட்டினை பேராசிரியர் எஸ். ரவீந்தரன் செய்திருந்தார்.
விழாவில், அதிராம்பட்டினம், மதுக்கூர், ராஜாமடம், புதுக்கோட்டை உள்ளூர் ஆகிய பகுதிகளின் 7 பள்ளிகளைச் சேர்ந்த 400 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி இளங்கலை ஹோம் சயின்ஸ் (மனையியல்) சார்பில், தேசிய ஊட்டச்சத்து வார விழா விழிப்புணர்வு கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு, கல்லூரி முதல்வர் ஏ. முகமது முகைதீன் தலைமை வகித்து, ஊட்டச்சத்து பற்றிய கண்காட்சியைத் திறந்து வைத்து ஊட்டச்சத்தின் அவசியம் குறித்து விளக்கிப் பேசினார். கல்லூரி துணை முதல்வர்கள் எம். முகமது முகைதீன், என்.ஏ முகமது பாருக் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
கல்லூரி மனையியல் பிரிவு முதலாம் ஆண்டு மாணவிகள் சினேகா, அரசி ஆகியோர் 'உணவு மற்றும் ஊட்டச்சத்து', 'அழிந்து வரும் பாரம்பரிய உணவு' ஆகிய தலைப்புகளில் பேசினர்.
கண்காட்சியில், ஊட்டச்சத்து உணவுகள், காய்கறி உள்ளிட்ட இயற்கை உணவுகளை நேரடியாக வைத்தும், ஊட்டச்சத்து உணவுகளால் ஏற்படும் நன்மைகள் பற்றியும், ஊட்டச்சத்து உணவுகள் வழங்கியும் மாணவ, மாணவிகளுக்கு விளக்கி கூறப்பபட்டது.
முன்னதாக, கல்லூரிப் பேராசிரியை எஸ்.ஆரிபா வரவேற்றுப் பேசினார். பேராசிரியைகள் என். சித்ரா, வி.கானப்பிரியா ஆகியோர் தொகுத்து வழங்கினர். முடிவில், பேராசிரியை ஏ. ஆர்த்தி நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாட்டினை பேராசிரியர் எஸ். ரவீந்தரன் செய்திருந்தார்.
விழாவில், அதிராம்பட்டினம், மதுக்கூர், ராஜாமடம், புதுக்கோட்டை உள்ளூர் ஆகிய பகுதிகளின் 7 பள்ளிகளைச் சேர்ந்த 400 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.