தஞ்சாவூர் ஆட்டக்கார தெருவில் வசித்து வரும் முதியவர் முகமது அபுசாலிக் என்பவர் முதிர்ந்த வயதிலும் மிட்டாய் வியாபாரம் செய்து வருவதாக தொலைக்காட்சி மற்றும் நாளிதழ்களில் செய்தி வெளியானது. அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை உத்தரவின்பேரில், தஞ்சாவூர் வட்டாட்சியர் வெங்கடேஸ்வரன் தலைமையில் வருவாய்த்துறை அலுவலர்கள் முதியவர் முகமது அபுசாலிக் வசிப்பிடத்திற்கு சென்று, அவருக்கு முதியோர் உதவித்தொகை வழங்குவது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
அதனடிப்படையில், மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின்படி, தஞ்சாவூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மிட்டாய் வியாபாரம் செய்யும் முதியவர் முகமது அபுசாலிக் அவர்களுக்கு மாதாமாதம் முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணையினை தஞ்சாவூர் வட்டாட்சியர் வெங்கடேஸ்வரன் இன்று (30.09.2019) வழங்கினார்.
MashaAllah
ReplyDeleteமாஷாஅல்லாஹ் வாழ்த்துக்கள்
ReplyDelete