.

Pages

Monday, September 30, 2019

மிட்டாய் தாத்தாவுக்கு முதியோர் உதவித்தொகை வழங்கல்!

தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் ஆட்டக்காரத் தெருவைச் சேர்ந்த முதியவர் முகமது அபுசாலிக் அவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை உத்தரவின்படி முதியோர் உதவித்தொகைக்கான ஆணை இன்று (30.09.2019) வழங்கப்பட்டது.

தஞ்சாவூர் ஆட்டக்கார தெருவில் வசித்து வரும் முதியவர் முகமது அபுசாலிக் என்பவர் முதிர்ந்த வயதிலும் மிட்டாய் வியாபாரம் செய்து வருவதாக தொலைக்காட்சி மற்றும் நாளிதழ்களில் செய்தி வெளியானது. அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை உத்தரவின்பேரில், தஞ்சாவூர் வட்டாட்சியர் வெங்கடேஸ்வரன் தலைமையில் வருவாய்த்துறை அலுவலர்கள் முதியவர் முகமது அபுசாலிக் வசிப்பிடத்திற்கு சென்று, அவருக்கு முதியோர் உதவித்தொகை வழங்குவது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

அதனடிப்படையில், மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின்படி, தஞ்சாவூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மிட்டாய் வியாபாரம் செய்யும் முதியவர் முகமது அபுசாலிக் அவர்களுக்கு மாதாமாதம் முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணையினை தஞ்சாவூர் வட்டாட்சியர் வெங்கடேஸ்வரன் இன்று (30.09.2019) வழங்கினார்.

2 comments:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.