.

Pages

Thursday, August 29, 2019

தேசிய விளையாட்டு தினத்தில் அரசுப் பள்ளி மாணவன் கெளரவிப்பு (படங்கள்)

அதிராம்பட்டினம், ஆக. 29
தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு அதிராம்பட்டினம் அரிமா சங்கம் சார்பில், இறகுப் பந்து போட்டியில் சாதனை நிகழ்த்திய அரசுப் பள்ளி மாணவன் இன்று (29-08-2019) வியாழக்கிழமை கெளரவிக்கப்பட்டார்.

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளி 3 ஆம் வகுப்பு மாணவன் அ.ஆத்திப் அகமது. இவர், பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற 10 வயதிற்குட்பட்ட ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறகுப்பந்து போட்டிகளில் கலந்துகொண்டு சிறப்பிடம் பெற்றுள்ளார்.

இந்நிலையில், தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு, அதிராம்பட்டினம் அரிமா சங்கம் சார்பில், சங்க மாவட்ட உயர்கல்விக்கான வழிகாட்டுதல் பிரிவு (Higher studies guidance ) தலைவர் பேராசிரியர் எம்.ஏ முகமது அப்துல் காதர் கலந்துகொண்டு,சாதனை மாணவன் ஆத்திப் அகமதுக்கு சால்வை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கி பாராட்டுத் தெரிவித்தார்.

நிகழ்ச்சிக்கு, அதிராம்பட்டினம் அரிமா சங்கத் தலைவர் எம். அப்துல் ஜலீல் தலைமை வகித்தார். செயலாளர் எம். நிஜாமுதீன், பொருளாளர் எஸ்.எம். முகமது முகைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளித் தலைமை ஆசிரியை எஸ். மாலதி வரவேற்றார். இந்நிகழ்ச்சியில், அதிராம்பட்டினம் அரிமா சங்க முன்னாள் தலைவர் என். ஆறுமுகச்சாமி, இணைச் செயலாளர் எம். முகமது அபூபக்கர், பள்ளி ஆசிரியர் டேவிட் ஆரோக்கியராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.