.

Pages

Thursday, August 15, 2019

அதிராம்பட்டினம் அரிமா சங்கம் சார்பில் சுதந்திர தின விழாக் கொண்டாட்டம் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஆக. 15
இந்தியாவின் 73 வது சுதந்திர தின விழா நாடெங்கிலும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி அதிராம்பட்டினம் அரிமா சங்கம் சார்பில், அரசு தொடக்கப்பள்ளியில் சுதந்திர தின விழா வியாழக்கிழமை காலை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு அதிராம்பட்டினம் அரிமா சங்கத் தலைவர் எம் அப்துல் ஜலீல் தலைமை வகித்து, இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட லயன்ஸ் சங்க மாவட்டத் தலைவர் பேராசிரியர் கே. செய்யது அகமது கபீர் சுதந்திர தின விழா பேரூரை நிகழ்த்தினார். விழாவில், பள்ளி மாணவர்களுக்கு எழுதுகோல், நோட்டு புக்குகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

விழாவில், அதிராம்பட்டினம் அரிமா சங்கச் செயலர் எம். நிஜாமுதீன், பொருளாளர் எஸ்.எம். முகமது முகைதீன், லயன்ஸ் சங்க மாவட்டத் தலைவர் பேராசிரியர் எம்.ஏ முகமது அப்துல் காதர், பேராசிரியர் எஸ்.பி கணபதி, பேராசிரியர் முருகானந்தம், அரிமா சங்க நிர்வாகிகள் ஆர். செல்வராஜ், என். ஆறுமுகச்சாமி, முல்லை ஆர்.மதி, எம். முகமது அபூபக்கர், ஏ.கண்ணன், வரிசை முகமது மற்றும் பள்ளி தலைமை ஆசிரியை ஜெ.பி. சாந்தி, பள்ளி ஆசிரியைகள் ஏ.சுப்புலட்சுமி, என். உமா தேவி, பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
 

 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.