தஞ்சாவூர் மாவட்டம், கல்லணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு நிகழ்ச்சி மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம் அவர்கள் முன்னிலையில், உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ், கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜய பாஸ்கர், வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு, சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி ந.நடராஜன், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் எஸ்.வளர்மதி, புதுச்சேரி மாநில வேளாண்மை, மின்சாரம் மற்றும் கல்வித் துறை அமைச்சர் கமலக்கண்ணன், அரசு தலைமை கொறடா எஸ்.ராஜேந்திரன், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் ஆ.அண்ணாதுரை (தஞ்சாவூர்), எஸ்.சிவராசு, (திருச்சிராப்பள்ளி), டி.ஆனந்த் (திருவாரூர்), டாக்டர் சீ.சுரேஷ்குமார், (நாகப்பட்டிணம்), பி.உமா மகேஸ்வரி (புதுக்கோட்டை),டாக்டர் டி.ஜி.வினய் (அரியலூர்) ஆகியோர் பாசனத்திற்கு தண்ணீரை இன்று (17.08.2019) திறந்து விட்டு மலர் தூவி வரவேற்றார்கள்.
தமிழக முதலமைச்சர் அவர்களால் 13.08.2019 அன்று காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
மேட்டூரிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் கல்லணையில் இருந்து விவசாய பணிகள் தொடங்குவதற்காக காவிரியில் 1000 கன அடியும், வெண்ணாற்றிலிருந்து 1000 கன அடியும், கல்லணைக் கால்வாயிலிருந்து 500 கன அடியும், கொள்ளிடத்திற்கு 1000 கன அடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கல்லணை தலைப்பிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய் கடைமடை பகுதிகளுக்கு சென்றடைய தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. நடப்பாண்டில் காவிரி கடைமடை டெல்டா மாவட்டஙகளான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ஆறுகள், வாய்கால்கள் மற்றும் வடிகால்களில் ரூ.5,325.20 இலட்சம் மதிப்பீட்டில் சுமார் 2211.63 கிமீ நிளத்திற்கு திட்ட நிதியின் கீழ் தூர்வரி கரைகள் பலப்படுத்தும் பணி நடைபெற்று வருகின்றது.
விவசாய தேவைக்காக சம்பா பாசனத்திற்கு தங்கு தடையின்றி தண்ணீரினை வழங்கிட வேண்டியுள்ளதால் விவசாயிகள் நீரினை சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 16.08.2019 காலை 4.00 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 111.98 அடியாகவும் நீh இருப்பு 81.52 டி.எம்.சியாகவும் உள்ள நிலையில் இருப்பில் இருக்கும் தண்ணீரை அக்டோபர் இறுதி வரை சம்பா பாசனத்திற்கு தங்குதடையின்றி வழங்க வேண்டிய நிலை உள்ளதால் நீர் பங்கீட்டில் தேவைக்கேற்ப மாறுபாடுகள் செய்து சிக்கனத்தை கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகிறது. இந்த ஆண்டு சம்பா பயிரிட எந்தவித இடையூறும் இல்லாது பாசனவசதி அளிக்கப்பட வேண்டும் என்றும் பருவமழைக்கேற்ப நீர்ப்பங்கீடு மாற்றி அமைத்துக் கொள்ளலாம் எனவும், விவசாயப்பெருங்குடி மக்களுக்கு அன்புட்ன தெரிவிப்பதுடன், நீரினை சிக்கனமாக பயன்படுத்தி பொதுப்பணித்துறை அலுவலர்களுடன் நீர்பங்கீட்டிற்கு ஒத்துழைப்பு நல்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில், தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ் மகேஷ்வரன், சட்ட மன்ற உறுப்பினர்கள் சி.வி.சேகர் (பட்டுக்கோட்டை), மா.கோவிந்தராசு (பேராவூரணி), பவுன்ராஜ் (பூம்புகார்) ராதாகிருஷ்ணன் (மயிலாடுதுறை), பாரதி (சீர்காழி),ராமஜெயலிங்கம் (ஜெயங்கொண்டம்), ஆறுமுகம் (கந்தர்வக்கோட்டை) மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல், ஒருங்கிணைந்த பால்கூட்டுறவு சங்கத்தலைவர் ஆர்.காந்தி, முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்கள் ராம்குமார், இராம.இராமநாதன், ரெத்தினசாமி, பி.என். ராமச்சந்திரன், முன்னாள் மேயர் சாவித்திரி கோபால், முன்னாள் கூட்டுறவு ஒன்றிய தலைவர் மோகன், அரசு வழக்கறிஞர் சோழபுரம் அறிவழகன், பாபநாசம் முன்னாள் ஒன்றியத் தலைவர் கோபிநாத், தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, கண்காணிப்பு பொறியாளர் அன்பரசன், வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் மற்றும் பொது மக்கள் கலந்துகொண்டனர்.
தமிழக முதலமைச்சர் அவர்களால் 13.08.2019 அன்று காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
மேட்டூரிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் கல்லணையில் இருந்து விவசாய பணிகள் தொடங்குவதற்காக காவிரியில் 1000 கன அடியும், வெண்ணாற்றிலிருந்து 1000 கன அடியும், கல்லணைக் கால்வாயிலிருந்து 500 கன அடியும், கொள்ளிடத்திற்கு 1000 கன அடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கல்லணை தலைப்பிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய் கடைமடை பகுதிகளுக்கு சென்றடைய தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. நடப்பாண்டில் காவிரி கடைமடை டெல்டா மாவட்டஙகளான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ஆறுகள், வாய்கால்கள் மற்றும் வடிகால்களில் ரூ.5,325.20 இலட்சம் மதிப்பீட்டில் சுமார் 2211.63 கிமீ நிளத்திற்கு திட்ட நிதியின் கீழ் தூர்வரி கரைகள் பலப்படுத்தும் பணி நடைபெற்று வருகின்றது.
விவசாய தேவைக்காக சம்பா பாசனத்திற்கு தங்கு தடையின்றி தண்ணீரினை வழங்கிட வேண்டியுள்ளதால் விவசாயிகள் நீரினை சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 16.08.2019 காலை 4.00 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 111.98 அடியாகவும் நீh இருப்பு 81.52 டி.எம்.சியாகவும் உள்ள நிலையில் இருப்பில் இருக்கும் தண்ணீரை அக்டோபர் இறுதி வரை சம்பா பாசனத்திற்கு தங்குதடையின்றி வழங்க வேண்டிய நிலை உள்ளதால் நீர் பங்கீட்டில் தேவைக்கேற்ப மாறுபாடுகள் செய்து சிக்கனத்தை கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகிறது. இந்த ஆண்டு சம்பா பயிரிட எந்தவித இடையூறும் இல்லாது பாசனவசதி அளிக்கப்பட வேண்டும் என்றும் பருவமழைக்கேற்ப நீர்ப்பங்கீடு மாற்றி அமைத்துக் கொள்ளலாம் எனவும், விவசாயப்பெருங்குடி மக்களுக்கு அன்புட்ன தெரிவிப்பதுடன், நீரினை சிக்கனமாக பயன்படுத்தி பொதுப்பணித்துறை அலுவலர்களுடன் நீர்பங்கீட்டிற்கு ஒத்துழைப்பு நல்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில், தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ் மகேஷ்வரன், சட்ட மன்ற உறுப்பினர்கள் சி.வி.சேகர் (பட்டுக்கோட்டை), மா.கோவிந்தராசு (பேராவூரணி), பவுன்ராஜ் (பூம்புகார்) ராதாகிருஷ்ணன் (மயிலாடுதுறை), பாரதி (சீர்காழி),ராமஜெயலிங்கம் (ஜெயங்கொண்டம்), ஆறுமுகம் (கந்தர்வக்கோட்டை) மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல், ஒருங்கிணைந்த பால்கூட்டுறவு சங்கத்தலைவர் ஆர்.காந்தி, முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்கள் ராம்குமார், இராம.இராமநாதன், ரெத்தினசாமி, பி.என். ராமச்சந்திரன், முன்னாள் மேயர் சாவித்திரி கோபால், முன்னாள் கூட்டுறவு ஒன்றிய தலைவர் மோகன், அரசு வழக்கறிஞர் சோழபுரம் அறிவழகன், பாபநாசம் முன்னாள் ஒன்றியத் தலைவர் கோபிநாத், தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, கண்காணிப்பு பொறியாளர் அன்பரசன், வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் மற்றும் பொது மக்கள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.