.

Pages

Wednesday, August 7, 2019

5,000 ஆண்டுகளாக வற்றாத நீர் கொண்ட ஜம்ஜம் கிணறு எனும் உலக மகா அதிசயம்!

அதிரை நியூஸ்: ஆக. 07
புனித மக்கா நகரில் அமைந்துள்ள கஃபத்துல்லாஹ் கட்டிடத்தில் இருந்து சுமார் 20 மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள ஜம்ஜம் எனும் உலக மகா அதிசயக் கிணறு கடந்த சுமார் 5,000 ஆண்டுகளாக நீரை வாரி வழங்கி வருகிறது.

கடும் பாலைவன பிரதேசத்தில் நீர் ஊருவதற்கான வழியே இல்லாத இடத்தில் அமைந்துள்ள இந்த ஜீவகிணறு சுமார் 30 அடி ஆழம் மட்டுமே உடையது.

ஒரு மணித்துளிக்கு (per second) அதிகபட்சம் 18.5 லிட்டர் நீரையும் குறைந்தபட்சமாக 11 லிட்டரையும் வாரி இறைத்து ஹஜ், உம்ரா யாத்ரீகர்களின் தாகத்தை நித்தமும் தனித்து வருகின்றது.

சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்னால் நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் தனது மனைவி ஹாஜரா (அலை) அவர்களையும் கைக்குழந்தையாக இருந்த நபி இஸ்மாயில் (,அலை) அவர்களையும் இறைவனின் உத்தரவிற்கு இணங்க பாலைவனத்தில் விட்டுச் சென்றபோது தாகத்தால் கதறிய குழந்தை இஸ்மாயில் (அலை) அவர்களின் பசி, தாகத்தை தீர்ப்பதற்கு இறைவனின் அனுமதி கொண்டு வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் தனது சிறகால் அடித்து நீரை பீறிட செய்தார்கள்.

பின்பு அப்துல் முத்தலீப் அவர்களுடைய காலத்தில் ஹஜ் யாத்ரீகர்களின் தாகம் தீர்ப்பதற்காக புனரமைப்பு செய்யப்பட்டது.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.