.

Pages

Sunday, August 11, 2019

அதிரையில் சர்வதேச பிறை கமிட்டியினரின் ஹஜ் பெருநாள் தொழுகை (படங்கள்)

அதிரை நியூஸ்: ஆக.11
உலகெங்கும் சர்வதேச பிறை அறிவிப்பின் அடிப்படையில் பெருநாள் கொண்டாடக்கூடிய மக்கள் உள்ளனர். அவர்களைப் போல் அதிரையிலும் சர்வதேச பிறையின் அடிப்படையில் தங்களுடைய நோன்பு, ஈகைத் திருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் போன்றவற்றையும் அமைத்துக் கொள்கின்றனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை அதிரையிலும் சர்வதேச பிறை கமிட்டியின் சார்பாக ஷிஃபா மருத்துவமனை எதிர்புறமுள்ள மைதானத்தில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என குடும்பத்துடன் வருகை தந்து ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்.

பெருநாள் தொழுகை மற்றும் பெருநாள் குத்பா உரையை மவ்லவி. அன்சார் தப்லீகியின் மாணவரும் அதிரை அகமது ஹாஜா (தமுமுக) மகனாருமான  ஷேக் உமர் நிகழ்த்தினார்.

பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டு குத்பாவையும் பூரணமாக செவிமடுத்தால் மட்டுமே பெருநாள் தொழுகையை முழுமையாக நிறைவேற்றியதாக அமையும், அந்த வகையில் இன்று தொழுகைக்கு வந்திருந்த மக்கள் கடைசி வரை கலையாதிருந்து சுன்னத்தை முழுமைபடுத்தினர், இது அதிரையில் நடைபெறும் எந்தப் பெருநாள் தொழுகையிலும் காணக்கிடைக்காத காட்சி. அல்ஹம்துலில்லாஹ்.

அதிரை அமீன்
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.