அதிரை நியூஸ்: ஆக. 05
ஹஜ் செய்யும் நியூஸிலாந்து துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அன்பான வரவேற்பு
நியூஸிலாந்து நாட்டின் 2 மஸ்ஜிதுகளில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் மன்னரின் விருந்தினர்கள் என்ற திட்டத்தின் கீழ் இவ்வருடம் ஹஜ் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளனர்.
இவர்களின் முதலாவது குழு கடந்த வெள்ளியன்று ஜித்தா விமான நிலையத்தில் வந்திறங்கினர். இவர்களுக்கு பேரீத்தம் பழங்கள், ஜம்ஜம் நீர், ரோஜா மலர் மற்றும் இதர பரிசுப் பொருட்களை வழங்கி அன்போடு வரவேற்றார் ஜித்தா விமான நிலையத்தின் ஜாவாஜத் துறையின் டைரக்டர் கர்னல். சுலைமான் அல் யூசுப், அப்போது நியூஸிலாந்து நாட்டின் தூதர் ஜேம்ஸ் மன்றோ அவர்களும் உடனிருந்து வரவேற்றதுடன் மன்னரின் இத்திட்டத்திற்கு தனது நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.
இந்த ஆண்டு மன்னரின் விருந்தினர்கள் என்ற திட்டத்தில் சுமார் 6,000 பேர் ஹஜ் செய்யவுள்ள நிலையில் கடந்தாண்டு வரை 53,747 பேர் ஹஜ் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்
ஹஜ் செய்யும் நியூஸிலாந்து துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அன்பான வரவேற்பு
நியூஸிலாந்து நாட்டின் 2 மஸ்ஜிதுகளில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் மன்னரின் விருந்தினர்கள் என்ற திட்டத்தின் கீழ் இவ்வருடம் ஹஜ் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளனர்.
இவர்களின் முதலாவது குழு கடந்த வெள்ளியன்று ஜித்தா விமான நிலையத்தில் வந்திறங்கினர். இவர்களுக்கு பேரீத்தம் பழங்கள், ஜம்ஜம் நீர், ரோஜா மலர் மற்றும் இதர பரிசுப் பொருட்களை வழங்கி அன்போடு வரவேற்றார் ஜித்தா விமான நிலையத்தின் ஜாவாஜத் துறையின் டைரக்டர் கர்னல். சுலைமான் அல் யூசுப், அப்போது நியூஸிலாந்து நாட்டின் தூதர் ஜேம்ஸ் மன்றோ அவர்களும் உடனிருந்து வரவேற்றதுடன் மன்னரின் இத்திட்டத்திற்கு தனது நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.
இந்த ஆண்டு மன்னரின் விருந்தினர்கள் என்ற திட்டத்தில் சுமார் 6,000 பேர் ஹஜ் செய்யவுள்ள நிலையில் கடந்தாண்டு வரை 53,747 பேர் ஹஜ் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.