.

Pages

Thursday, August 8, 2019

காதிர் முகைதீன் கல்லூரியில் உலக தாய்ப்பால் விழிப்புணர்வு கருத்தரங்கம்!

அதிராம்பட்டினம், ஆக. 08
அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் உலக தாய்ப்பால் விழிப்புணர்வு கருத்தரங்கு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் ஏ.முகமது முகைதீன் தலைமை வகித்து தாய்ப்பாலின் அவசியம் குறித்து விளக்கினார்.

பொதுநல மருத்துவர் டாக்டர் ஏ. ஆஃப்ரின் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசுகையில், குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்க வேண்டியது தாய்மார்களுக்கும், குழந்தைகளுக்கும் மிகவும் அத்தியாவசியமானது என்றார். மேலும், தாய்ப்பால் அளித்தால் தாயின் அழகு கெட்டுவிடுமென கூறப்படுவதை மறுத்துப் பேசினார். மாணவிகளின் பல்வேறு சந்தேகங்களுக்கும் விளக்கமளித்தார்.

மேலும், கல்லூரிப் பேராசிரியைகள் என்.சித்ரா, எம்.பரிதா பேகம், எஸ்.சாபிரா பேகம் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை, கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் பேராசிரியர்கள் ஜெ.முகமது அலி, ஏ.அப்ரூஸ் பானு, ஜி.ஆர் ஞானராஜா, ஜெ.சாஜித் இக்பால் ஆகியோர் செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் கல்லூரிப் பேராசிரியர்கள், மாணவிகள் கலந்துகொண்டனர்.
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.