.

Pages

Thursday, April 25, 2013

அதிரை தாஜூல் இஸ்லாம் சங்கத்தின் மனிதநேயப் பணி !

அதிரையில் ஏறக்குறைய பத்துக்கும் மேற்பட்ட  ரேஷன் கடைகள் உள்ளது. தமிழக அரசால் பொதுமக்கள் பயன்பெரும் வகையில் நியாய விலைகளில் சீனி, மண்எண்ணெய், இலவச அரிசி, சமையல் எண்ணெய், உளுந்து, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கின்றன.

அதிரையில் அதிக எண்ணிக்கையில், அதாவது மேலத்தெரு, காட்டுபள்ளித் தெரு, பிலால் நகர், ஆதம் நகர் ஆகிய பகுதியில் இருந்து ஏறக்குறைய 2000 த்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை மேலத்தெருவில் அமைந்துள்ள நியாய விலைக் கடை எண் 6  பெற்றுள்ளது.



இந்தக் கடையிலிருந்து பொருட்களை வாங்கிச் செல்வதற்காக நீண்ட தூரத்திலிருந்து வருகை தரும் தாய்மார்கள் கடையைச் சுற்றிய வெளிப்பகுதியில் நீண்ட வரிசையில் காத்துக்கிடக்கின்ற அவல நிலை காணப்பட்டு வந்தது. இதனால் வயதான ஒரு சிலர் அவ்வப்போது மயங்கி கீழே விழுவதும் உண்டு.

இதைக்கருத்தில் கொண்டு மேலத்தெரு தாஜூல் இஸ்லாம் சங்கம் நிர்வாகத்தின் சார்பாக வெயிலின் கொடுமையை குறைக்கும் விதமாக கடையைச்சுற்றி பந்தல் அமைத்துக் கொடுத்து, அதில் தண்ணீரும் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர்.

இதனால் இந்தக் கடையில் பொருட்கள் வாங்கிச்
செல்லும் பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சியடைதுள்ளதோடு மட்டுமல்லாமல்  தாஜூல் இஸ்லாம் சங்கத்தின் மனிதநேயப் பணியை பாராட்டத் தவறியதில்லை.

இது தற்காலிக பந்தல் என்றாலும் எதிர்காலத்தில் நிரந்திர செட் அமைத்து பொதுமக்களை வெயிலின் கொடுமையிலிருந்து பாதுகாப்பார்கள் என்று எதிர்பார்போம். இதுபோல் மற்ற மஹல்லாவில் அமைந்துள்ள நியாய விலைக்கடைகளிலும் அந்தந்த சங்க நிர்வாகத்தின் சார்பாக பந்தல் அமைத்து தண்ணீர் ஏற்பாடு செய்து கொடுத்தால் பொதுமக்கள் மிகவும் பயனடைவர்.

4 comments:

  1. நல்லதோர் சேவை, தாஜூல் இஸ்லாம் சங்கம் நிர்வாகிகள்ளுக்கு என் மனமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும்.........

    ReplyDelete
  2. இந்த வெயில் கொடுமையின் தாக்கத்தை தீர்க்க தக்க சமயத்தில் இத்தகையில் யோசித்த தாஜுல் இஸ்லாம் சங்கத்தின் சமுதாயச்சேவை பாராட்டப்பட வேண்டிய மனித நேய சேவை.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. தாஜூல் இஸ்லாம் சங்கம் நிர்வாகிகள்ளுக்கு என் மனமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும்......

    ReplyDelete
  4. அதிரை மேலத் தெரு TIYA-விற்க்கு SDPI நன்றி அறிவிப்பு!

    அதிரை SDPI மேற்க்கு கிளை சார்பில் தாஜூல் இஸ்லாம் சங்கத்திடம் மேலத் தெருவில் உள்ள ரேஷன் கடைக்கு நிழல் பந்தல் அமைப்பது தொடர்பாக வேண்டுக்கோள் வைக்கப்பட்டது. இதனை ஏற்று தாஜூல் இஸ்லாம் சங்கம் சார்பில் தற்போது நிழல் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக SDPI நிர்வாகிகளிடம் கேட்டதற்க்கு "எங்களின் கோரிக்கையை ஏற்று மக்கள் நலனில் அக்கறை கொண்டு விரைந்து நிழல் பந்தல் அமைத்த தாஜூல் இஸ்லாம் சங்க நிர்வாகிகளுக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்" என்று கூறினர்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.