.

Pages

Friday, April 26, 2013

தரகர் தெரு ஜூம்மாப் பள்ளியில் அதிரை பைத்துல்மாலின் மாதாந்திரக் கூட்டம் !


அதிரை பைத்துல்மாலின் மாதாந்திரக்கூட்டத்தில் இனி ஒவ்வொரு மஹல்லாஹ் பள்ளிவாசல்களிலும் நடத்துவது  என தீர்மானிக்கப்பட்டதை அடுத்து கடந்த [ 29-03-2013 ] அன்று மாலை 4.30 மணியளவில் முதல் கூட்டமாக நமதூர் கடற்கரைத்தெரு ஜூம்ஆ பள்ளி வளாகத்தில் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து இன்று [ 26-04-2013 ] மாலை 4.30 மணியளவில் இரண்டாவதுக் கூட்டம் நமதூர் தரகர் தெரு ஜூம்ஆ பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. ஹாஜி ஜனாப். SKM. ஹாஜா முகைதீன் அவர்களின் தலைமையில், தரகர்தெரு ஜமாத் நிர்வாகிகளின் முன்னிலையில், பைத்துல்மால் நிர்வாகிகளின் பங்களிப்போடு இனிதே துவங்கின.
[ Click on image to enlarge ]





நிகழ்ச்சியின் நிரல் :

1. கிரா-அத் : ஹாஜி. ஜனாப் OKM. சிஹாப்துல்லா [ பொருளாளர் ]

2. வரவேற்புரை : ஹாஜி. ஜனாப் வழக்கறிஞர் A. அப்துல் முனாப் [ துணைத் தலைவர் ]

3. மாதாந்திர அறிக்கை வாசித்தல் : ஹாஜி. ஜனாப் S. அப்துல் ஹமீது [ செயலாளர் ]

4. தெருவில் புழங்கும் சைக்கிள் வட்டியை படிப்படியாக குறைக்கும் நோக்கில் ரூபாய் 1000/- முதல் ரூபாய் 3000/- வரையிலான வட்டியில்லா சிறுதொகை கடன் திட்டம் கடந்த கடற்கரைத்தெரு ஜூம்ஆ பள்ளியில் நடைபெற்ற கூட்டத்திலிருந்து முதன் முறையாக செயல்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்றைய கூட்டத்திலும் இத்திட்டம் தொடர்பாக பேசப்பட்டது. இறுதியில் தரகர் தெரு ஜமாத் நிர்வாகிகளின் பங்களிப்போடு அதிரை பைத்துல்மால் சார்பாக தரகர்தெரு மஹல்லாவில் இத்திட்டத்தை செயல்படுத்துவது என தீர்மானிக்கப்பட்டது. இதற்காக ரூபாய் 10,000/-ம் ஒதுக்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

5. இன்ஷா அல்லாஹ் வரும் கல்வி ஆண்டு [ 2013-2014 ]  முதல் அதிரை பைத்துல்மாலின் “உயர்க்கல்வி திட்டத்தை” அமல்படுத்துவது தொடர்பாக கடற்கரைத்தெரு ஜமாஅத் நிர்வாகத்தினரிடம் ஒத்துழைப்பு மற்றும் ஆலோசனையைக் கோரினார் அதிரை பைத்துல்மாலின் துணைத் தலைவர் ஹாஜி ஜனாப். SKM. ஹாஜா முகைதீன் அவர்கள்.

6. நன்றியுரை : ஹாஜி. ஜனாப் OKM. சிஹாப்துல்லா [ பொருளாளர் ]

குறிப்பு : அடுத்த மாதாந்திரக்கூட்டம் நமதூர் புதுத்தெரு மஹல்லாவில் நடைபெறும் [ இன்ஷா அல்லாஹ் ! ]

3 comments:

  1. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  2. தகவல் அறியத்தந்தமைக்கு நன்றி.

    ReplyDelete

  3. தகவலுக்கும் நன்றி.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.