.

Pages

Saturday, April 27, 2013

த.மு.மு.க அதிரை கிளை நடத்திய மாபெரும் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் !

த.மு.மு.க அதிரை கிளையின் சார்பாக தொடர்ந்து அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்படுபவதை கண்டித்து மாபெரும் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று [ 27-04-2013 ] மாலை 4.30 மணியளவில் நடைபெற்றது.
[ Click on Image to enlarge ]





த.மு.மு.க வின் தஞ்சை மாவட்டத் [ தெற்கு ] தலைவர் ஜப்பார் அவர்கள் தலைமை வகிக்க, த.மு.மு.க வின் மாநில பொதுச்செயலாளர் P. அப்துல் சமது அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார்.

முன்னதாக பேரணி தக்வாப் பள்ளி அருகிலிருந்து புறப்பட்டு கடைத்தெரு, பழைய போஸ்ட் ஆபிஸ் ரோடு வழியாக அதிரை பேருந்து நிலையத்தை அடைந்தது. இதைத்தொடர்ந்து பெரும் திரளானோர் கலந்து கொண்ட இந்தக்கூட்டத்தில் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. குறிப்பாக பெங்களூரில் கடந்த சில தினங்களுக்கு முன் பாரதிய ஜனதா அலுவலகம் அருகே வெடிகுண்டு வெடித்ததில் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாததால் தமிழகத்தை சேர்ந்த அப்பாவி முஸ்லிம்கள் மேலப்பாளையம் கிச்சான் புகாரி மற்றும் சில இளைஞர்களை கைது செய்துள்ளனர் என்றும், கர்நாடக மாநிலத்தில் தேர்தல் நடைபெற சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் ஆதாயம் தேட பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சிகள் நாடகத்தை சேர்ந்தே நடத்தியுள்ளனர் என்றும், இவற்றையெல்லாம் மக்கள் மன்றத்தில் தோலுரித்துக் காட்டவும், தொடர்ந்து அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை பயங்கரவாதிகளாக காட்டும் காவல்துறையினரின் போக்கை கண்டித்து கோசங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் த.மு.மு.க வின் நகர பொருளாளர் M.O. செய்யது முஹம்மது புகாரி அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.

பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்திற்கு த.மு.மு.க அதிரை கிளையின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதில் த.மு.மு.க நிர்வாகிகள் உள்ளிட்ட பல நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

6 comments:

  1. அல்லாஹ்வின் கயிற்றை நாம் பிடிக்கும் போது மற்றவர்கள் அதைப்பிடிக்க முன் வராவிட்டாலும் நாம்
    பிடியை விட்டு விடக் கூடாது.

    அவர்களையும் பிடிக்குமாறு அழைப்பது தான் நம் மீதுள்ள கடமையாகும்.

    அல்லாஹு அக்பர்

    ReplyDelete
  2. "நீங்கள் ஒரே சங்கமாக (ஒற்றுமையாக) இருந்து கொள்ளுங்கள். உங்களிடையே ஏற்படும் பிளவுகள் குறித்து கவனமாக இருந்து கொள்ளுங்கள்" என்று நபி(ஸல்) சமூகத்தை நோக்கி எச்சரிக்கும் ஹதீஸ் புகாரி மற்றும் முஸ்லிம் நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ReplyDelete
  3. அல்லாஹ்வின் கயிற்றை நாம் பிடிக்கும் போது மற்றவர்கள் அதைப்பிடிக்க முன் வராவிட்டாலும் நாம்
    பிடியை விட்டு விடக் கூடாது அவர்களையும் பிடிக்குமாறு அழைப்பது தான் நம் மீதுள்ள கடமையாகும்.

    இந்த கண்டனத்தை தாமதமாக செய்திருந்தாலும் மிகவும் வரவேற்ககூடியது, அல்லாஹு அக்பர்.......

    ReplyDelete
  4. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  5. பாதிப்புக்குள்ளாகும் நம் சமுதாயமக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி உணர்த்துவது அவசியமே.!

    ReplyDelete
  6. நாம் எதற்காக நடத்திய போராட்டம் அது வெற்றிப்பெற அல்லாஹு இடத்தில் துவா செய்வோம்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.