Image credit : Gulfnews
Image credit : khaleejtimes
ஈரானின் முதல் அணுமின் உற்பத்தி நிலையம் புஷேர் நகரில் செயல்பட்டு வருகிறது. அந்த இடத்தின் அருகே இன்று மாலை 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலுக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
துறைமுக நகரமான புஷேரில் இருந்து 60 மைல்கள் தெற்கில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும், அப்போது 6.1 ரிக்டர் ஆக பதிவானதாகவும் டெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் உள்ள ஈரான் நில அதிர்வு மையம் அறிவித்துள்ளது.
ஈரான் மட்டுமின்றி, துபாய், ஷார்ஜா மற்றும் பிற அமீரக நாடுகள் முழுவதும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட்டதும் பொதுமக்கள் வீடுகளை விட்டு அவசரம் அவசரமாக வெளியேறி திறந்த வெளிக்கு வந்தனர்.
துபாய் மெரினா பகுதியில் உள்ள கட்டிடங்கள் காலி செய்யப்பட்டு, ஊழியர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். மனாமாவில் உள்ள முக்கியமான அலுவலகங்களில் உள்ள ஊழியர்களும் உடனடியாக வெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நன்றி : தமிழ் இஸ்லாம் மீடியா
துபாயில் இருக்கும் நாங்கள் கேள்விப்படுமுன் அதிரை நியூஸ் சிற்கு செய்தி கிடைத்து விடுவது ஆச்சரியமாக உள்ளது.
ReplyDeleteசெய்தி படித்த பிறகு தான் இங்கு உணரப்பட்ட நிலநடுக்கம் உண்மையென தெரிந்து கொண்டோம்.
அதிரை நியூஸ்சிற்கு நன்றியுடன் வாழ்த்துக்கள்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்.
அன்புடன்.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
அதிரை நியூஸ் செய்தி படித்த பிறகு தான் இங்கு நிலநடுக்கம் ஏற்ப்பட்டது என தெரிந்து கொண்டோம்.விரைவான பதிவுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
பதிவுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteநேற்று சரியாக மதியம் 2.55 மணியளவில் சவுதி தமாமிர்கும் அல்கோபர்க்கிடையேயுள்ள ராக்கா பகுதியிலும் நாங்கள் நில அதிர்வை உண்ர்ந்தோம்.
அதிரை நியூஸ் செய்தி படித்த பிறகு தான் இங்கு நிலநடுக்கம் ஏற்ப்பட்டது என தெரிந்து கொண்டோம்.விரைவான பதிவுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDelete