.

Pages

Saturday, April 13, 2013

தாமதமில்லா சம்பளம் வழங்கக்கோரி அதிரை பேரூராட்சியின் துப்புரவு தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் [ காணொளி ] !

அதிரையில் அன்றாடம் சேருகின்ற குப்பைக் கழிவுகளை அகற்றும் விதமாக கடந்த எட்டு வருடங்களுக்கும் மேலாக ஒப்பந்தம் அடிப்படையில் பணி புரிந்து வருகின்ற துப்புரவு தொழிலாளர்கள் தாமதமில்லா சம்பளம் வழங்கக்கோரி இன்று [ 13-04-2013 ] காலை அதிரை பேரூராட்சியின் முன்பாக அமர்ந்து வேலை நிறுத்தத்தை மேற்கொண்டனர். இந்த வேலை நிறுத்தத்தால் அதிரையில் ஆங்காங்கே குமிந்து கிடக்கும் குப்பைக் கூளங்கள் தேங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


இதுகுறித்து அதிரை பேரூராட்சியின் செயல் அலுவலரை தொடர்பு கொண்டு விளக்கம் பெற்ற வகையில்...

தனி நபரின் பெயரில் காசோலை வழக்கப்படுவதில்லை என்றும், குழுவின் பெயரிலேயே காசோலை வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் சில நாட்கள் தாமதமாகின்றன. இனி தாமதமில்லாமல் சம்பளம் வழங்குவதற்குரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்.

7 comments:

  1. இவங்கள சரியான நேரத்துலே கவனிங்கப்பா,,.. இல்லேனா ஊரு நாறிடும் :(

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.

    வெட்கமாக இருக்கு.
    என்னத்த சொல்ல.

    ReplyDelete
  3. மனமுவந்து ஊரைச்சுத்தம் செய்து மக்கள் சேவை செய்யும் இவர்களின் உள்ளம் நோகடிக்காமல் அவர்களின் சம்பளத்தை சரியான நேரத்தில் கொடுத்துதவ அதன் பொறுப்புதாரர்கள் முனைந்து செயல் படவேண்டும்.

    ReplyDelete
  4. உழைப்புக்கு ஊதியம் அவசியம் அதை சரியான நேரத்தில் கொடுக்கப்பா?

    ReplyDelete
  5. உழைப்புக்கு ஊதியம் அவசியம் அதை சரியான நேரத்தில் கொடுக்கப்பா?

    ReplyDelete
  6. உழைப்புக்கு ஊதியம் அவசியம் அதை சரியான நேரத்தில் முனைந்து செயல் படவேண்டும்.....

    ReplyDelete
  7. Ridiculous,Yowww,. Give to them salary at right TIME,Otherwise too bad for panchayath board.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.