.

Pages

Thursday, April 11, 2013

செய்னா குளத்தின் புனரமைப்பு பணிகள் தொடருமா !? பொதுமக்கள் ஆதங்கம் !

அதிரை பேரூராட்சியின் சார்பாக 2012-2013 ஆம் ஆண்டுக்கான நபார்டு நிதி உதவி திட்டத்தின் கீழ், கீழத்தெரு முஹல்லாவிற்கு உட்பட்ட பகுதியில் உள்ள செய்னா குளம் – தடுப்பு சுவர் அமைத்தல் மற்றும் மேம்படுத்துதல் ஆகிய பணிகளுக்காக ரூபாய் 50 லட்சம் நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டு, இந்த பணிகளுக்கான ஒப்பந்தமும் இறுதி செய்யப்பட்டும் இதற்குரிய பணிகள் துவங்குவதற்குரிய எவ்வித முகாந்திரமும் தென்படவில்லை என்பதால் இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பெரும் ஆதங்கத்தில் உள்ளனர்.


இக்குளத்தில் கலக்கின்ற அசுத்தங்களாலும், குப்பைக்கழிவுகளாலும் சுகாதாரக்கேடு ஏற்பட்டு இந்தக்குளத்தை சுற்றி வசிக்கக்கூடிய பொதுமக்களுக்கு வைரஸ் தொற்று கிருமிகளால் நோய்கள் பரவும் வாய்ப்பு அதிகம் உள்ளதால், விரைவாகப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே இந்தப் பகுதி மக்களின் எதிர்பார்ப்பு.

சம்பந்தப்பட்டவர்கள் கவனத்தில் கொள்வார்களா !?

4 comments:

  1. பதிவுக்கு நன்றி.

    இதற்க்கு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லாவிட்டால் நோய் தோற்றிக்கொள்ளும்.

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  3. செய்னாங்குளம் என்பது மிகப்பழமையான ஒரு குளம். அதனை தூர்வாரி மற்ற புரனமைப்பு பணிசெய்தால் புண்ணியமாக இருக்கும்.

    யார் முயற்சிப்பது..???

    ReplyDelete
  4. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.