.

Pages

Tuesday, April 23, 2013

அறுந்து விழப்போகும் உயர்மின் அழுத்தக் கம்பியால் ஆதம் நகர் மக்கள் அச்சம் !

அதிரை காதிர் முகைதீன் கல்லூரியின் எதிரே அமைந்துள்ள உயர் மின் அழுத்தக் கம்பி அறுந்து கீழே விழும் அபாயத்தால் ஆதம் நகர் பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கல்லூரி மாணவ மாணவியர் அதிகளவில் புழங்கக்கூடிய இடம் மட்டுமல்லாமல் வர்த்தக நிறுவனங்கள் அமைந்துள்ள இடமாகவும் அமைந்துள்ளது.



அதிரை நியூஸ் சார்பாக  'மனித உரிமை ஆர்வலர்' KMA. ஜமால் முஹம்மது அவர்கள் அதிரை மின்சார வாரிய அலுவலத்தின் கவனத்திற்கு எடுத்துச்சென்றுள்ளார். கோரிக்கையை கேட்டறிந்ததோடு மட்டுமல்லாமல் உடன் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.

முஹம்மது முகைதீன் [ DIGI TECH ]

4 comments:

  1. உடன் பார்வைக்கு கொண்டுவந்த தம்பி ஹாஜா முகைதீனுகும், உடன் நடவடிக்கை எடுக்க உதவிய மனித உரிமை ஆர்வலர் ஜமால் காக்கா அவர்களுக்கும் மிக்க நன்றி !

    பொதுமக்களை பெரும் இழப்பிலிருந்து பாதுகாப்பது அவசியம் - துரித நடவடிக்கை தேவை.

    ReplyDelete
  2. அறுந்து விழும் நிலையில் உள்ள இந்த மின்கம்பியை விரைவில் மாற்றியமைக்க தக்க நடவடிக்கை எடுக்குமாறு மனித உரிமைக்காவலர் ஜமால் காக்கா அவர்கள் முயற்ச்சிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
  3. பெரிய இழப்பிலிருந்து பாதுகாப்பது அவசியம் அதற்க்கு முன் தகுந்த நடவடிக்கை எடுக்கவும்.இந்த புகைப்படத்தை எடுத்த முஹம்மது முகைதீன் [ DIGI TECH ] அவர்களுக்கு நன்றிகள் பல.

    ReplyDelete
  4. பதிவுக்கு நன்றி.

    நேற்றைய தினம் திரு பிரகாஷ் உதவி பொறியாளர் அவைகளிடம் இந்த செய்தியை எத்திவைக்கப்பட்டது. எந்த வித தாமதம் இல்லாமல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.