.

Pages

Monday, April 8, 2013

கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு அலுவலர்கள் அதிரையில் நேரடி ஆய்வு [ காணொளி ] !

தஞ்சை மாவட்டம் பேராவூரணி, பெருமகளூர், அதிரை பேரூராட்சிகள், பட்டுக்கோட்டை சேதுபாவா சத்திரம், பேராவூரணி, மதுக்கூர், பாபநாசம், திருவையாறு ஆகிய 9 ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 1,153 குடியிருப்புகளுக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்க கடந்த [ 09-04-2012 ] அன்று நடந்த சட்டசபைக் கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பாக 2012 & 2013 ஆம் ஆண்டுக்கான அறிவிப்பு வெளியிட்டு இதை செயல்படுத்துவதற்கு நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தன.


இந்தப் பணிகளுக்காக திருச்சியிலிருந்து வருகை தந்த குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் இன்று மாலை அதிரையில் நேரடியாக ஆய்வுகளை மேற்கொண்டனர்.

இறுதியாக மேலத்தெரு நீர்தேக்க தொட்டியின் அருகே உள்ள இடம் மேட்டுப்பகுதியாகவும், போதுமான பரந்த இடத்தையும் கொண்டுள்ளதால் ஆய்வை மேற்கொண்ட அலுவலகர்கள் தேர்வு செய்துள்ளனர். மேலும் இந்த பணிகள் முழுவதும் வருகின்ற இரண்டு ஆண்டுக்குள் நிறைவு பெரும் என்ற தகவலையும் தெரியப்படுத்தினர்.

ஆய்வை மேற்கொண்ட அலுவலர்களுடன் அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம், துணைத்தலைவர் பிச்சை, வார்டு கவுன்சிலர் முஹம்மது யூசுப், லத்திப், சாகுல் ஹமீத்,  ஆகியோரோடு மணிச்சுடர் நிருபர் சாகுல் ஹமீது ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தினால் 24 மணி நேரமும் குடிநீர் வசதியை அதிரை பொதுமக்கள் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் மற்றும் பேரூராட்சி தலைவர் ஆகியோரோடு ஒரு நேர்காணல்.

4 comments:

  1. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    ஆனால் சி.எம்.பி. லைனுக்கு தண்ணீர் வராது.

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  2. பயனுள்ள ஆய்வு.

    அறியத்தந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  3. என்ன அதிரை நியூஸ் தலைவரை மட்டும் பேட்டி எடுத்திங்க பெரும் தலைவரை ஏன் எடுக்கவில்லை

    ReplyDelete
  4. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.