.

Pages

Wednesday, April 24, 2013

புதுப்பட்டினம் அபு மெட்ரிக் உயர்நிலைப்பள்ளியில் புதிய அட்மிஷன் !

காதிர் முகைதீன் கல்லூரியின் முன்னாள் முதல்வர் பேராசிரியர் துல்கருணைன் அவர்கள் நிறுவனராக செயல்படும் புதுப்பட்டினம் அபு  மெட்ரிக் உயர்நிலைப்பள்ளியில் புதிதாக மாணவ மாணவியர் சேர்க்கை பணிகள் வருகின்ற [ 06-05-2013 ] அன்று முதல் துவங்க உள்ளது.
[ Click on image to enlarge ]






இந்தப்பள்ளியின் சிறப்பு அம்சங்கள் :
1. பத்தாம் வகுப்பு தொடங்கி கடந்த ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து 100 விழுக்காடு தேர்ச்சி பெற்று வருகின்றனர்.

2. அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது.

3. எல்லா வகுப்புகளுக்கும் [ ஸ்மார்ட் கிளாஸ் ] முறையில் உலகத்தரம் வாய்ந்த நிறுவனத்தாரின் உதவியோடு பாடங்கள் நடத்தப்பட உள்ளன.

4. சிறந்த ஈடுபாட்டுடன் கூடிய தகுதி வாய்ந்த இளநிலை மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.

5. முப்பருவ கல்வி முறையின் அடிப்படையில் தொடர் மற்றும் கூட்டு மதிப்பீட்டு முறையிலான கல்வி அளிக்க தகுந்த ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார்கள்.

6. தகுதி வாய்ந்த உடற்கல்வி ஆசிரியர்கள் மூலமாக உடற்கல்வி கற்றுக்கொடுக்கப்படுகிறது.

7. ஸ்மார்ட் கிளாஸ் தவிர கணினி பாட பயிற்சி வகுப்புகள் சிறந்த நிறுவனத்தைக் கொண்டு நடத்தப்படுகிறது.

8. மாணவர்கள் அன்றாடம் கவனிக்கப்பட்டு நேரம் தவறாமை சீருடையில் வருதல் போன்ற நல்லொழுக்கங்கள் பேணப்படுகிறது.

9. இஸ்லாமிய மாணவர்களுக்கு அரபி மற்றும் தீனியாத் வகுப்புகளும் மற்ற மாணவர்களுக்கு நீதி போதனை வகுப்புகளும் நடத்தப்படுகிறது.

10. இந்தி பாட வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது.

11. மாணவர்கள் ஆங்கிலத்தில் சரளமாக பேசுவதற்கு அன்றாடம் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

12. வெளியூர் மாணவர்களுக்கு வாகன வசதி மற்றும் உணவு தங்கும் வசதி உண்டு.

மேலும் கூடுதல் விவரங்கள் தொடர்புக்கு :
தொலைபேசி : 04373 285555

3 comments:

  1. தகவல் அறியத்தந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  2. தகவலுக்கு நன்றி பள்ளியின் அருமையான லோக்கேசண்.

    ReplyDelete
  3. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.