.

Pages

Thursday, April 18, 2013

காதிர் முகைதீன் கல்லூரியில் மீலாத் விழா நிகழ்ச்சி !

அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் இன்று [ 18-04-2013 ] காலை 10.30 மணியளவில் சமீபத்தில் நவினப்படுத்தப்பட்ட கலையரங்கில் முதல் நிகழ்ச்சியாக மீலாத் விழா சிறப்பாக நடைபெற்றது.





நிகழ்ச்சியின் நிரல் :

1. MKN ட்ரஸ்டின் தற்காலிக நிர்வாகி நீதியரசர் K. சம்பத் அவர்கள் தலைமை தாங்கினார்

2. காதிர் முகைதீன் கல்லூரியின் முதல்வர் முனைவர் A. ஜலால் அவர்களால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது.

3. சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட தஞ்சை மாவட்ட ஜமாத்துல் உலமாவின் தலைவர் இமாம் M. செய்யது அஹமது அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்.

4. நிகழ்ச்சியின் இறுதியில் தமிழ்த்துறை தலைவர் முனைவர் A. கலீல் ரஹ்மான் அவர்களால் நன்றியுரை நிகழ்த்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், காதிர் முகைதீன் கல்லூரியின் பேராசிரியர்கள், அலுவலக ஆய்வகப் பணியாளர்கள், மாணவ மாணவிகள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

மேலும் நபிகள் நாயகம் [ ஸல் ] அவர்களைப்பற்றிய சிறப்பு பேச்சு போட்டி மற்றும் கட்டுரைப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற மாணவ மாணவியருக்கு சான்றிதழும், குர்ஆனும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியின் இறுதியில் சிறப்பு 'துஆ' சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட தஞ்சை மாவட்ட ஜமாத்துல் உலமாவின் தலைவர் இமாம் M. செய்யது அஹமது அவர்களால் நிகழ்த்தப்பட்டு நிகழ்ச்சிகள் அனைத்தும் இனிதே நிறைவுற்றன.

2 comments:

  1. செய்தி அறியத்தந்தமைக்கு நன்றி.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. தகவலுக்கு நன்றி வாழ்த்துக்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.