அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் இன்று [ 18-04-2013 ] காலை 10.30 மணியளவில் சமீபத்தில் நவினப்படுத்தப்பட்ட கலையரங்கில் முதல் நிகழ்ச்சியாக மீலாத் விழா சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சியின் நிரல் :
1. MKN ட்ரஸ்டின் தற்காலிக நிர்வாகி நீதியரசர் K. சம்பத் அவர்கள் தலைமை தாங்கினார்
2. காதிர் முகைதீன் கல்லூரியின் முதல்வர் முனைவர் A. ஜலால் அவர்களால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது.
3. சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட தஞ்சை மாவட்ட ஜமாத்துல் உலமாவின் தலைவர் இமாம் M. செய்யது அஹமது அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்.
4. நிகழ்ச்சியின் இறுதியில் தமிழ்த்துறை தலைவர் முனைவர் A. கலீல் ரஹ்மான் அவர்களால் நன்றியுரை நிகழ்த்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், காதிர் முகைதீன் கல்லூரியின் பேராசிரியர்கள், அலுவலக ஆய்வகப் பணியாளர்கள், மாணவ மாணவிகள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
மேலும் நபிகள் நாயகம் [ ஸல் ] அவர்களைப்பற்றிய சிறப்பு பேச்சு போட்டி மற்றும் கட்டுரைப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற மாணவ மாணவியருக்கு சான்றிதழும், குர்ஆனும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியின் இறுதியில் சிறப்பு 'துஆ' சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட தஞ்சை மாவட்ட ஜமாத்துல் உலமாவின் தலைவர் இமாம் M. செய்யது அஹமது அவர்களால் நிகழ்த்தப்பட்டு நிகழ்ச்சிகள் அனைத்தும் இனிதே நிறைவுற்றன.
செய்தி அறியத்தந்தமைக்கு நன்றி.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
தகவலுக்கு நன்றி வாழ்த்துக்கள்.
ReplyDelete