அக்கூட்டத்தில் கடந்த [ 19-04-2013 ] வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணியளவில் கூட்டப்பட்ட கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி பள்ளியில் மார்க்கப் பயான் நடத்துவதற்கு 'உலமாக்கள் சபை' மூலம் ஒப்புதல் கடிதம் பெற்ற பிறகு அனுமதி வழங்குவது என்ற தீர்மானம் தொடர்ந்து நடைமுறையில் உள்ளது என்றும், இந்த தீர்மானத்தை மீறும் விதமாக நிர்வாக முடிவுக்கு எதிராக செயல்படுவோர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என இக்கூட்டத்தில் தீர்மானித்துள்ளனர்.
மேலும் இந்த ஒரு பிரச்னையால் தக்வா பள்ளி மற்றும் மீன் மார்கெட் ஆகியவற்றின் வளர்ச்சிப் பணிகளில் கவனம் செலுத்த முடியவில்லை என்று பள்ளியின் நிர்வாகிகள் குறைபட்டுக்கொண்டனர்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்.
அன்புடன்.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
நீதியை நிலை நாட்டுங்கள்
ReplyDeleteநல்லது நடந்தால் சரிதான்.
ReplyDeleteஇந்த ஆலிமால் நேர்ந்த பிரச்சனை என்ன, சுமூக தீர்வுக்கு வழி என்ன என்பதையும் அதிரடி முடிவாக இல்லாமல் அனைவரும் ஏற்கும் வழியில், இஸ்லாமிய வழியில் உடனடியாக நிர்வாகம் ஆலோசித்தால் ரொம்ப நல்லதாக இருக்கும்.
ReplyDeleteசட்டப்படி நடவடிக்கை எடுக்கும் போது பாதிக்கப்படுவதும் ஒரு பகுதி நம்மவர்களாகத் தான் இருக்கும். எனவே இங்கு மார்க்கப் படி நடவடிக்கை மட்டுமே மிக அவசியம்.
சட்டப்படி நடவடிக்கையில் பள்ளியில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு என்ற சூழ்நிலை வந்து நாம் அவமானப்பட்டு விடக் கூடாது.
அல்லாஹ் பாதுகாப்பானாக!
அஸ்ஸலாமு அலைக்கும்,
ReplyDeleteமேற்கண்ட செய்தியை படித்தவுடன், தக்வா பள்ளி நிர்வாகத்தின் ஒரு உறுப்பினரிடம் இதைபற்றி விசாரித்த வகையில் அங்கு பேசப்பட்டதை கீழ்கண்டவாறு விவரித்தார்;
கடந்த 19.04.2013 அன்று கூட்டப்பட்ட கூட்டத்தில் முறையாக அழைப்பு விடுக்காததால் சில உறுப்பினர்கள் அன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை, மேலும் அன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் வக்ஃப் நெறிமுறை சட்டப்படி ஐந்து உறுப்பினர்களின் ஒப்புதல் இல்லாததாலும் அந்த தீர்மானம் செல்லத்தகாதவை என்று தெரியவந்ததால் நேற்று 27.04.2013 அன்று காலை 11.00 மணிக்கு அவசர கூட்டம் நடைபெற்றது, அதில் வழக்கம்போல் நடைபெறும் எல்லா நிகழ்ச்சிகளும் தொடரும் என வாய் மொழியாக முடிவெடுக்கப்பட்டது.
ஆக, 19.04.2013 அன்றைய கூட்டமும் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் செல்லாதவை யாக இருப்பதால் அந்த தீர்மானத்தை தொடர எந்த முகாந்திரமும் இல்லை என தெரிவித்தார்.
நெறியாளருக்கு ஓர் வேண்டுகோள்:
மற்ற சில அதிரை வளைதளங்களைப்போல் சாதகமாக இருந்தால் வைத்துக்கொண்டு பாதகமாகயிருந்தால் நீக்குகிறதைப்போன்று, இந்த பின்னூட்டத்தை தயவு செய்து நீக்க வேண்டாம், ஏதேனும் கருத்து தேவைப்பட்டால் பின்கருத்திடவும்.
அஸ்ஸலாமு அலைக்கும்.
ReplyDeleteசட்டப்படி நடவடிக்கை எடுக்கும் போது பாதிக்கப்படுவதும் ஒரு பகுதி நம்மவர்களாகத் தான் இருக்கும். எனவே இங்கு மார்க்கப் படி நடவடிக்கை மட்டுமே மிக அவசியம், சட்டப்படி நடவடிக்கையில் பள்ளியில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு என்ற சூழ்நிலை வந்து நாம் அவமானப்பட்டு விடக் கூடாது.
அல்லாஹ் பாதுகாப்பானாக........
மற்ற சில அதிரை வளைதளங்களைப்போல் சாதகமாக இருந்தால் வைத்துக்கொண்டு பாதகமாகயிருந்தால் நீக்குகிறதைப்போன்று இல்லாமல் உள்ளதை உள்ள படியாக பதிந்தமைக்கு மிக்க நன்றி.........
அஸ்ஸலாமு அலைக்கும்,
ReplyDeleteஇந்திய நிதீக்ககே நீதிமன்றம் ஏற்றும் கலசாரதை தவிர்த்து, சுமுக உடன்பாடு காண்பதும். இறைபொருத்ததை நாடுவது சிறந்த நிர்வகதிறனை பறைசாற்றும்!!