.

Pages

Monday, April 29, 2013

இமாம் ஷாஃபி மெட்ரிக் பள்ளியிலிருந்து பேராசிரியர்கள் அப்துல் காதர், பர்கத் ஆகியோர் பணியிலிருந்து விடுவிப்பு !

அதிரை இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக திறம்பட இயங்கி கல்வியில் பின்தங்கிய அதிரை மற்றும் அதனை சுற்றி வசித்து வருகின்ற  மாணவ மாணவியருக்கு கல்வி புகட்டுதலில் முன்னோடியாக திகழ்ந்து வருகின்றது.

இப்பள்ளி டிரஸ்டின் கீழ் இயங்கி வந்தாலும் அதன் நிர்வாகிகள் பள்ளியின் வளர்ச்சியில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக பள்ளியின் தரத்தை உயர்த்துவதற்குரிய நடவடிக்கைகளில் மும்முரமாகியுள்ளனர்.

கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நிர்வாக இயக்குனராக பொறுப்பேற்றுக் கொண்டார் பேராசிரியர் முஹம்மது அப்துல் காதர் அவர்கள், அதே போல் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பள்ளியின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார் பேராசிரியர் பர்கத் அவர்கள். இவர்கள் இருவரும்  வருகின்ற [ 30-04-2013 ] அன்று முதல் பணியிலிருந்து விடுவிக்கப்பட உள்ளனர்.

9 comments:

  1. என்னா திடீர்ண்டு?? எதாச்சும் குற்றச்சாட்டின் பேரிலா? அல்லது பணி/வயது மூப்பின் காரணமா? புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் நோக்கிலா? புதுமை ஏதேனும் உண்டாக்கும் முயற்சியா? கொஞ்சம் வெளக்கமா சொன்னா நல்லா இரிக்கும்......

    ReplyDelete
  2. பணியிலிருந்து விடுபெறும் இரண்டு மூத்த ஆசிரியர்களும் பல திறமைமிக்க மாணவ, மாணவியர்களை உருவாக்கிய ஆசான்கள்.

    அவர்களின் இத்தனைகால சிறப்பு மிகு சேவைக்கு நன்றியுடன் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. திறன்ப்பட பணியாற்றிய இருவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.உங்கள் சேவை எங்களுக்கு தேவை.

    ReplyDelete
  4. இந்த செய்தி நிர்வாகத்தால் தரப்பட்டதா? பொறுப்பில் இருந்து விடுவிப்பது மட்டும் வெளியாகிருக்கின்றதே what next முழ விபரமும் தந்தாள் நலம் பயக்கும்

    ReplyDelete
  5. கல்வி தரத்தை உயர்த்த வேண்டும் என்றால்..நீங்கள் அசிரியர் ஊதியதை உயர்த்த வேண்டும்..நீங்கள் கொடுகும் ஊதியதம் அனுபவம் அற்ற பட்டதாரிகுட ஏற்கமுடியாத காலம் சூழ்நிலை இது!!!!!!!!!!! (kind advice for imam shafi school)--- by old student

    ReplyDelete
  6. இதன் காரணத்தால் 3 மததீற்கு 1 அசிரியர் பணிமாறும் நில்லை

    ReplyDelete
  7. இத்தனைகால சிறப்பு மிகு சேவைக்கு நன்றியுடன் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. பதிவுக்கு நன்றி.

    எது நடந்தாலும் நன்மைக்கே என்று எடுத்துக் கொண்டால் அங்கே கவலை இல்லை, கசப்பு இல்லை, ஒன்றும் இல்லை.

    இந்த உலகம் யாருக்கும் சொந்தம் இல்லை, பதவி சொந்தம் இல்லை, எதுவுமே சொந்தம் இல்லை. இனிமையான் குரல்கூட சொந்தம் இல்லை, அப்புறம் ஏன் வருத்தம்?

    பதவியிலிருந்து இறக்கம் அவ்வளவுதான், இதனால் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட ஆயுள்காலம் குறைந்திடுமா? உணவுகள் குறைந்திடுமா? படித்த கல்வி விட்டுட்டு போய்விடுமா? வல்ல நாயன் அவர்களுக்காக இன்னும் எத்தனையோ சங்கதிகளை ஆயத்தப்படுத்தி வைத்துள்ளானே, அதெல்லாம் குறைந்திடுமா?

    சிந்தித்து பாருங்கள், எல்லாம் சரியாகி விடும்.

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.