.

Pages

Thursday, April 4, 2013

குடிநீர் தட்டுப்பாடு எதிரொலி அதிரை பேரூராட்சி அலுவலகம் முற்றுகை !

இன்று [ 04-04-2013 ] காலை கடற்கரைத்தெருவில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு சீராக குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் அதிரை பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகை இட்டனர். இதனால் இந்தப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாகக் காணப்பட்டது.



கடற்கரைத்தெருவில் கடந்த சில நாட்களாகவே குடிநீர் விநியோகத்தில் தடங்கள் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து அப்பகுதியில் வாழும் பொதுமக்கள் மிகவும் அவதியுறும் நிலையைக் கருத்தில் கொண்டு கடற்கரைத்தெரு ஜமாத்தினர் அதிரை பேரூராட்சித் தலைவர் SH. அஸ்லம், துணைத்தலைவர் பிச்சை, வார்டு உறுப்பினர் KSA. சாகுல் ஹமீத் ஆகியோரை அழைத்து இந்தப் பகுதிகளில் குடிநீர் விநியோகத்தை சீராக வழங்கும் படி வேண்டுகோள் விடுத்துள்ளதை கடந்த [ 28-03-2013 ] அன்று தளத்தில் செய்தியாக நாம் வெளியிட்டிருந்தோம்...

கடும் மின் பற்றாக்குறை காரணமாக  அதிரையில் மின் வெட்டு நேரம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும் கடந்த சில வாரங்களாக 12-14  மணி நேரமாக இருந்து வருவது வேதனையாக உள்ளது.

முக்கிய நேரங்களில் அமலாக்கப்படும் மின் வெட்டால் பொதுமக்கள் மாத்திரமல்ல ஆண்டு இறுதித்தேர்வு எழுதும் / எழுத தயாராகும் மாணவ, மாணவிகள் மிகவும் அவதியுறும் நிலை ஏற்பட்டு உள்ளன. இதனால் அதிரையில் குடிநீர் விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளதோடு பொது மக்களின் அன்றாட பணிகளும் முடங்கிப் போயுள்ளன.

1 comment:

  1. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.
    அன்புடன்.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.