.

Pages

Tuesday, May 14, 2013

14 வது வார்டில் சீராக குடிநீர் வழங்குவதற்காக ஆரம்பிக்கப்பட்ட பணிகள் நிறைவு !

அதிரை 14 வது வார்டுக்கு உட்பட்ட நடுத்தெரு மேல்புறம், காலியார் தெரு, வெற்றிலைக்காரத்தெரு ஆகிய பகுதிகளில் கடந்த ஐந்து ஆண்டுகளாக குடிநீர் விநியோகம் பற்றாக்குறையுடன் காணப்பட்டு வந்தது. இதனால் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பலர் மிகவும் பாதிப்படைந்து வந்தனர்.

பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை இந்த பகுதியின் வார்டு உறுப்பினர் முஹம்மது ஷரிப் அவர்கள் மூலம்  அதிரை பேரூராட்சியின் கவனத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது. இதைத்தொடர்ந்து விலாரிக்காடு பகுதியிலிருந்து நேரடியாக குடிநீர் விநியோகம் செய்யும் வகையில் ரூபாய் நான்கு இலட்சம் செலவில் சுமார் இரண்டு கிலோ மீட்டர் நீளத்தில் பைப் லைன் போடப்பட்டன.

இந்தப் பணிகளின்  செய்தியை முதன் முறையாக கடந்த [ 23-04-2013 ] அன்றே தளத்தில் வெளியிட்டோம்.


அதன் தொடர்ச்சியாக அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காக சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதில் விலாரிக்காடு பகுதியில் இருந்து பம்ப் மோட்டாரை இயக்கிய சில நிமிடங்களிலேயே மரைக்காப் பள்ளி அருகே வைக்கப்பட்ட பைப் முனையில் தண்ணீர் வேகமாகப் பாய்ச்சிக் கொட்டியது. இதில் கலந்துகொண்ட அதிரை பேரூராட்சித் தலைவர் SH. அஸ்லம், வார்டு உறுப்பினர் முஹம்மது ஷரிப், கான்ட்ராக்டர் சுல்தான் மற்றும் 'மணிச்சுடர் நிருபர்' சாகுல் ஹமீது ஆகியோர் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.

5 comments:

  1. கடந்த ஐந்து ஆண்டுகளாக குடிநீர் பற்றாக்குறையுடன் காணப்பட்டு வந்த இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.............. மிக துரிதமாக செயல்பட்ட அணைத்து சகோதரர்களுக்கும் எனது நன்றியும் வாழ்த்தும்.

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  3. இப்பணியை நிறைவு செய்ய பாடுபட்ட அனைவர்களுக்கும்,நன்றியுடன் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. \\இப்பணியை நிறைவு செய்ய பாடுபட்ட அனைவர்களுக்கும்,நன்றியுடன் வாழ்த்துக்கள்.//

    இது ஆரம்பம் தானுங்கோ இன்னும் நிறையா ஈக்கிது

    இருந்தாலும் என்னுடைய வாழ்த்துகளையும் தெரிவிச்சிகிறேனுங்க

    ReplyDelete
  5. இதில் முழு முயற்ச்சி செய்த அனைவர்க்கும் எனது வாழ்த்துக்கள் தண்ணீரை வீண் விரயம் செய்யாமல் முறையாக பயன்படுதிக்கொள்ளவும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.