.

Pages

Wednesday, May 8, 2013

அசந்தால் அதிரையரையே !? முட்டி வீசிவிடும் ஜமுனா பாரி !?

அதிரை கடைத்தெருவில் இறைச்சிக் கடை நடத்தும் தமீம் என்பவர் ஜமுனா பாரி ரக கிடா [ ஆண் ] ஆட்டை வளர்க்கிறார். வெள்ளை நிறத்தில் போர் வீரனாய் காட்சியளிக்கும் 'ஜமுனா பாரி' ஆடுகள் 2 லட்சம் ரூபாய் வரை விற்கப்படுகிறது.



இவை சேலம், மதுரை, வட மாநிலங்களில் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது.  இவற்றை வாங்கி, செல்லப் பிராணியாக வளர்த்து வருகிறார். மந்தை மந்தையாக தான் வளர்க்கும் செம்மறி ஆட்டுடன் ஜமுனா பாரியை மேய்ச்சலில் விட்டுள்ளார். இதன் கிடாவுக்கு தனி மதிப்பு உண்டு. உடல் முழுவதும் ஜொலிக்கும் பொசு, பொசுவென்ற ரோமம், நீண்ட அழகிய காதுகள், தூணாக தோன்றும் இதன் கால்கள் ஆகியவை ரசிக்கும்படி இருக்கும்.

வளர்ந்த கிடாக்கள் 50 கிலோ வரை எடை உள்ளவை. இவற்றின் கறிக்கு தனி கிராக்கி உள்ளது. பண்டிகையையொட்டி, வசதியானவர்கள் இந்த ஜமுனா பாரி ரக ஆடுகளை பிரியாணிக்கு பயன்படுத்துகின்றனர். இவை 80 ஆயிரத்திலிருந்து இரண்டு லட்சம் ரூபாய் வரை விலை பேசப்படுகிறது. சினைக்கு மட்டுமே இவை அதிகளவில் பயன்படுத்தப்படும்.

இதுகுறித்து கடைத்தெருவில் இறைச்சிக் கடை நடத்தும் தமீம் கூறியதாவது : 'இதற்கு தீனிகள் ஸ்பெஷலாக கொடுப்போம்.  குறிப்பாக ஆண் ஆடுகள் இனப்பெருக்கத்திற்காக வளர்க்கப்படுகிறது. மேலும்  இவ்வகை ஆடுகள் அசந்தால் ஆளையே தூக்கி வீசி விடும். இவற்றை இரண்டு புறமும் கயிறால் கட்டி வைத்தால் தான் கட்டுப்படுத்த முடியும். இல்லையென்றால், கட்டியிருக்கும் சுவரை முட்டிக்கொண்டே இருக்கும். குட்டி ஈன்ற ஆட்டிலிருந்து தினமும் ஒரு லிட்டர் பால் கறக்கலாம். இவற்றை தாய்ப்பால் சுரக்காத பெண்களுக்கு வழங்கலாம்' என்றார்.

6 comments:

  1. இப்படி ஒரு ரக ஆடு இருப்பது பதிவில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன்.

    தகவல் தந்தமைக்கு நன்றி

    ReplyDelete
  2. இப்படி ஒரு ரக ஆடு இருப்பது பதிவில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன்.

    ReplyDelete
  3. இப்படி ஒரு ரக ஆடு இருப்பது பதிவில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன்

    ReplyDelete
  4. REALLY NICE INFORMATION AND THANK YOU FOR THIS INFORMATION

    ReplyDelete
  5. இப்படி ஒரு ரக ஆடு இருப்பது பதிவில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன்

    ReplyDelete
  6. இப்படி ஒரு ரக ஆடு இருப்பது பதிவில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.