.

Pages

Saturday, May 11, 2013

தவ்ஹீத் அமைப்புகளின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் காட்டுப்பள்ளி கந்தூரி விழா !

அதிரை காட்டுப்பள்ளித் தெருவில் அமைந்துள்ள தர்ஹாவில் வருடந்தோறும் மேலத்தெரு / கீழத்தெரு சார்பாக கந்தூரி கமிட்டிகள் அமைக்கப்பட்டு தலா ஒரு வருடம் என இரு தெருக்களும் கந்தூரியை எடுத்து வருகின்றனர்.

கடந்த 525 வருடங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகின்ற காட்டுப்பள்ளி கந்துரியை அதிரையில் வசிக்கும் மார்க்க அறிஞர்கள் பலர் விரும்பவில்லை என்றாலும் அவர்கள் தங்களின் எதிர்ப்பையோ / ஆதரவையோ பகிரங்கமாக தெரியப்படுத்தியதில்லை. அதிரையில் தனித்தனியாக பிரிந்து செயல்படும் பல்வேறு தவ்ஹீத் அமைப்புகள் கந்துரி விழாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அவ்வப்போது துண்டு பிரச்சுரம், தெருமுனை பிராச்சாரம், பொதுக்கூட்டம், அரசின் கவனத்துக்கு எடுத்துச்செல்தல் என தங்களின் எதிர்ப்புகளை பகிரங்கமாக தெரிவித்து வருகின்றனர்.

இந்த எதிர்ப்புக்கு இடையில் இன்று மாலை 4.30 மணியளவில் காட்டுப்பள்ளியில் கந்தூரி நிகழ்வு நடைபெற்றது. இதில் பெண்கள் உட்பட பெரும்பாலானோர் கலந்து கொண்டனர். அதிரை நகரின் முக்கிய பகுதிகளில் ஆங்காங்கே போலீசார் பாதுகாப்பு பணிக்காக நிறுத்தப்பட்டு இருந்தனர்.





35 comments:

  1. இது பற்றி மார்க்க அறிஞர்கள் பலர் விரும்பவில்லை என்றாலும் அவர்கள் தங்களின் எதிர்ப்பையோ / ஆதரவையோ பகிரங்கமாக தெரியப்படுத்துவது எப்போது?

    இந்த பாவச் செயல் காரணமாக எத்தனை பேர் மஃரிப் தொழுகையை மிஸ் பண்ணினார்கள்?

    காற்று புகாத சமாதிக்குள் சந்தனம் பூச யார் தயார்?

    இது அடுத்தாண்டு இல்லாமல் இருக்க என் துஆ!

    ReplyDelete
  2. அவர்கள் எழுந்து நிற்கவும் சக்தி பெறவில்லை. அவர்கள் உதவி பெறுவோராகவும் இல்லை. (51: 45)

    தமக்கு உதவி செய்யப்பட அல்லாஹ்வையன்றி பல கடவுள்களை அவர்கள் ஏற்படுத்திக் கொண்டனர்.(36:74)

    அவனையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவிட இயலாது. தமக்கே அவர்கள் உதவ முடியாது. (7:197)

    இவ்வுலகிலும், மறுமையிலும் நல்லறங்கள் அழிந்து போனவர்கள் அவர்களே. அவர்களுக்கு உதவி செய்வோர் யாருமில்லை. (3: 22)

    உங்களுக்கு வேதனை வந்து, உங்களுக்கு உதவி செய்யப்படாத நிலை வருவதற்கு முன் உங்கள் இறைவனுக்குக் கட்டுப்பட்டு அவனிடமே திரும்புங்கள்! (39: 54

    அவர்கள் தாம், மறுமையை விற்று இவ்வுலக வாழ்வை வாங்கியவர்கள். எனவே அவர்களுக்கு வேதனை இலேசாக்கப்படாது; அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள். (2: 86

    அவர்கள் நேர் வழி பெற வேண்டும் என்று நீர் பேராசை வைத்தால், அல்லாஹ் யாரை வழி கேட்டில் விட்டு விட்டானோ அவருக்கு நேர் வழி காட்ட மாட்டான். அவர்களுக்கு உதவி செய்வோரும் இல்லை. (16: 37)

    ReplyDelete
  3. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  4. அஹ்மது ரிதுவான் – துபாய்
    என்ற சகோதரர் அதிரை எக்ஸ்பிரஸ் லோகோவின் கீழ் சிலவாசகங்கள் எழுதி அதில் தமது அறியாமையை பதிவு செய்து இருந்தார்.

    “கந்தூரியை நிறுத்துவது அவ்வளவு ஈசி கிடையாது, நிறுத்த முயற்சியும் நடக்குது, நம்மில் ஒற்றுமை இல்லையென்றால், எந்த சக்தியைக் கொண்டும் எதையும் சாதிக்க முடியாது என்பதை முதலில் விளங்கிக் கொள்ளவேண்டும், முதலில் ஊரை ஒற்றுமை படுத்தனும், நமக்குள் இருக்கும் போட்டி, பொறாமை, எல்லாம் நீங்கனும், நீங்கள் செய்யும் இந்த முயற்சி வெறும் வீண் தானே ஒழிய வேறு இல்லை”

    அதற்கு நான் மறுப்பு மடல் எழுதினேன்.
    அந்த மறுப்பு மடலை வெளியிடாமல் அதிரை எக்ஸ்பிரஸ்.இஸ்லாத்திற்குள்ளேயும் சில பார்ப்பனர் ஊடகங்கள் போன்று இருட்டடிப்பு செய்கின்றனர். அவர்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சாமல் மனிதற்களுக்கு அஞ்சுவார்களையானால்.அதை இழுத்து மூடுவது நல்லது
    என்னுடய மறுப்பு மடல் கீழே உள்ளது. அதிரை எக்ஸ்பிரசில் வெளியிடாடததால் இந்த செய்தி மக்களுக்கு போய் சேர வேண்டும் என்பதினால் வேறு சம்பந்தமில்லாத தலைப்பின் கீழ் பின்னூட்டமாக இடுவதை மன்னிக்கவும்.

    அஹ்மது ரிதுவான் சொல்வது தவறு.

    தாருத்தவ்ஹீது செய்யும் முயற்ச்சி கண்டிப்பாக வீன் போகாது இன்றில்லை என்றால் என்றாவது அது நடக்கும்
    இஸ்லாத்தை அவ்வளவு ஈசியாக வளர்க்க முடியாது என்று நபிகள் நாயகம் ரசூலே கரீம் (ஸல்) அவர்கள் நினைத்திருந்தால் இன்று அஹ்மது ரிதுவான் என்றும் முஹம்மது மன்சூர் என்றும் பெயர் சூட்டி இஸ்லாமியனாக வளம் வந்திருக்க முடியாது. நபிகள் நாயகம் ரசூலே கரீம் (ஸல்) அவர்கள் காட்டி தந்தவழி முறைகளைவிட்டு விட்டு அறியாமையில் மூழ்கி கிடக்கும் சகோதரர்களுக்கு இஸ்லாத்தை நன்கு விளங்கிய ஒவ்வொரு முஸ்லிமுக்கும் பொறுப்பு உண்டு.அதைத்தான் அறிந்தவர்கள் செய்து கொண்டிருக்கின்றனர். இதில் அஹ்மது ரிதுவானுக்கும் பொறுப்பு உண்டு.

    இஸ்லத்திற்கு எதிராக நடக்கும் அனாச்சாரங்களை தடுத்து நிறுத்துவதற்கு ஒவ்வொரு முஸ்லிமும் கடமை பட்டுள்ளோம். இது போன்ற அனாச்சாரங்களை தடுத்து நிறுத்த அஹ்மது ரிதுவானுக்கு சக்தி இல்லை என்றால்.சக்தி உள்ளவர்களோடு கை கோர்த்து வெற்றி காணவேண்டுமே தவிற இஸ்லாத்திற்கு எதிரன அனாச்சாரங்களை தடுத்து நிறுத்த முயற்ச்சிப்பவர்களை கேலிக்கூத்தாக்குவது இஸ்லத்திற்கு எதிராக போரிடுவதற்கு சமம்.

    முயற்சிகள் என்றும் வீன் போனதில்லை. நல்லவர்களின் முயற்சியால். இந்த வருடம்
    கந்தூரி ஊர்வலம் வீறீயம் குறைந்து 18 அயிட்டங்கள் வர இருந்தது அது எட்டாக குறைந்தது என்பது குறிப்பிட தக்கது இன்ஷா அல்லாஹ் படிப்படியாக அல்லாஹ் ஒன்றுமில்லாமல் ஆக்கி தறுவான்.

    நாம் முயற்சி செய்தால் அல்லாஹ் அதை நடத்தி தருவான். இந்த மாதிரி அநாச்சாரங்களை நடக்கவிட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டு ஊர் ஒற்றுமை என்ற சாயம் இதற்கு பூசக்கூடாது. ஊர் இரண்டானாலும் பரவாயில்லை .அனாச்சாரங்களை தடுப்பதில் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமை இருக்கின்றது என்பதை நினைவூட்டுகின்றேன்.

    இந்த மாதிரி இஸ்லாத்திற்கு எதிரான செயள்களை கண்டு கொள்ளாமல் இருப்பவன் இஸ்லாத்தில் இருந்து என்ன பயன்.

    ஊரா? இஸ்லாமா? என்றால் இஸ்லாம்தான் என்று தேர்ந்தெடுக்கும் மன துணிவு வேண்டும். இதற்கு எக்காரணத்தைகொண்டும் தெரு சாயம் பூசக்கூடாது. தெரு சாயம் பூசினால் மட்டும் ஊரின் ஒற்றுமையை காத்திட முடியுமா?
    சில அறிவிலிகளால் தெருக்களுக்கு சமீபகாலமாக மீன்சாயம் பூசப்படுகின்றது. என்னமோ பன்னாமீனை ருசிக்காதவர்கள் மாதிரி அநாகரிகமான வர்னனை செய்பவர்கின்றார்கள். இப்படி மீன் பெயரை சொல்லி அனாகரிகமாக வசைபாடுபவர்கள்.அதிரையை சார்ந்தவர்களாக இருக்க முடியாது. அப்படி அதிரையை சர்ந்தவர்களாக இருந்தால் பன்னாமீனை ருசிக்காமல் இருக்க முடியாது. வசை சொல்லுகின்றவருக்கும் அந்த வசை பொருந்தும் என்பது நினைவில் இருக்கட்டும். அப்படி ருசிக்கவில்லை என்று யார் வாதம் பான்னினாலும் அவர்கள் பொய்யர்களாகத்தான் இருக்க முடியும்.

    பொதுவாக இந்தமதிரி அநாச்சாரங்களை தடுக்க முடியாத சகோதரர்கள் அநாச்சாரங்களை தடுப்பவர்களுக்கு இடையூராக இருப்பதைவிட்டும் தயவு செய்து தூரமாகி அல்லாஹ்வின் கோவப் பார்வையிலிருந்து உங்களயும் எங்களையும் காப்பாற்றுங்கள். தயவு செய்து இது விஷயமாக மேலும் மேலும் தற்கிக்க வேண்டாம் என்று சகோதரர்களுக்கு அன்பான வேண்டுகோளை சமர்பிக்கின்றேன்.

    அதிரைமன்சூர்
    ரியாத்

    ReplyDelete
  5. இது சம்பந்தப்பட்ட தலைப்புதான்
    வேறு இனையதளங்களில் சம்பந்தமில்லாத தலைப்பின்கீழ் கட் & பேஸ்ட் செய்தது போன்று எடிட் செய்யாமல் பதிவு செய்துள்ளேன் இது சம்பந்தப்பட்ட தலைப்புதான்.

    ReplyDelete
  6. சந்தன கூடு இதில் என்ன இருக்கின்றது ? இது என்ன மாற்றுக்கிரகத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட பொருளா? மக்கள் யரும் பார்த்திராத அதிசயப்பொருளா? வெரும் கண்ணாடி துண்டுகளாலும் பேப்பர்களாலும் போர்டுகளாலும் செய்யப்பட்ட ஒரு பொருள். டெக்னாலாஜி வளர்ந்த இந்த கால கட்டத்தில் இதை வண்டியில் வைத்து இழுத்துக் கொண்டு வருவதால் இதைக்கொண்டு மக்களுக்கு பயன் என்ன என்பதை சம்பந்தப்பட்ட சகோதரர்கள் கொஞ்சம் ஆழமாக சிந்தித்தால் தாம் செய்யும் முட்டாள்தனத்தை நினைத்து தாமே வெட்கி தலைகுனிவதோடு அல்லாமல் இனி மேலும் அந்த தவறை யாரும் செய்யமாட்டார்கள்.
    இதை இழுத்துக்கொண்டு ஊரில் வலம் வந்து தனது மூர்க்கத்தனத்தையும் ரவுடிசத்தையும் நம் சகோதரர்களிடமே காட்டுவதால் மேல்மை மிக்கவர்கள் என்று என்னுகின்றார்களா? இதனால் இவர்களுக்கு என்ன கிடைக்கப் போகின்றது என்பதை அவர்கள் சிந்திக்க வேண்டாமா? அவ்லியாக்களிடமிருந்து பெருஸ்ஸா எதுவும் கிடத்துவிடும் என்று என்னுகின்றார்களா? அப்படி அவர்கள் என்னினால் கண்டிப்பாக அவர்கள் எல்லாவிஷயங்களிலும் நஷ்டமடைந்தவர்களே. அல்லாஹ் அவர்களுக்கு நேர்வழியை காட்டுவானாக ஆமீன்….

    ReplyDelete
  7. Assalamu alaikkum,

    Mansoor Kaka,

    you are very true,

    Adiraixpress is not good as the used to be , and these days they been showing partiality and are not transparent any more...

    They wanted to be express in news and end up in bringing wrong informations,

    people who visited AX this morning would know what i'm talking about...

    Regards

    ReplyDelete
  8. செவிடன் காதில் ஊதிய சங்காய். அவராவர் மார்கம் அவரவர்க்கு? வேரெவரும் இல்லை வணக்கத்துக்குரியோன் அல்லாஹ்வை தவிர என்பதன் பொருள் அவர்களுக்கு விளங்கவில்லையோ

    ReplyDelete
  9. அஸ்ஸலாமு அழைக்கும்!

    அனாச்சாரங்களை தடுப்பதில் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமை இருக்கின்றது என்பதை நினைவூட்டுகின்றேன். அனாச்சாரங்களை தடுக்க முயற்ச்சிப்பவர்களை கேலிக்கூத்தாக்குவது இஸ்லத்திற்கு எதிராக போரிடுவதற்கு சமம், கருத்தை பதிவு செயும் சகோதர்கள் மற்ற சகோதரர் பெயரை பதியும் போது அவர்கள் பெரியவர்கள் சிறியவர்கள் என பாராமல் சகோ அல்லது காக்கா என்று தான் நாம் அழைப்போம், கருத்து பதிவு செய்யும் அன்பர்கள் நம்ம ஊர் கண்ணியத்தை சிதைக்க வேண்டாம்.

    வஸ்ஸலாம்

    ReplyDelete
  10. They wanted to be express in news and end up in bringing (அதிரையில் இன்று மேலத்தெரு தர்கா கந்தூரி விழா நடைப்பெற இருக்கின்றது)wrong informations,

    people who visited AX this morning would know what i'm talking about...

    ReplyDelete
  11. "They wanted to be express in news and end up in bringing (அதிரையில் இன்று மேலத்தெரு தர்கா கந்தூரி விழா நடைப்பெற இருக்கின்றது)wrong informations,"

    Bro Maan,

    I'm not talking about that news,i didn't even notice that, There was an article about Muslims around the world and India (something like that) which had a wrong statistics..

    and they just post it with out verifying that,but if you post any comments they won't post unless if they person is very close to them.

    ReplyDelete
  12. அவர்கள் எழுந்து நிற்கவும் சக்தி பெறவில்லை. அவர்கள் உதவி பெறுவோராகவும் இல்லை. (51: 45)

    தமக்கு உதவி செய்யப்பட அல்லாஹ்வையன்றி பல கடவுள்களை அவர்கள் ஏற்படுத்திக் கொண்டனர்.(36:74)

    அவனையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவிட இயலாது. தமக்கே அவர்கள் உதவ முடியாது. (7:197)

    இவ்வுலகிலும், மறுமையிலும் நல்லறங்கள் அழிந்து போனவர்கள் அவர்களே. அவர்களுக்கு உதவி செய்வோர் யாருமில்லை. (3: 22)

    உங்களுக்கு வேதனை வந்து, உங்களுக்கு உதவி செய்யப்படாத நிலை வருவதற்கு முன் உங்கள் இறைவனுக்குக் கட்டுப்பட்டு அவனிடமே திரும்புங்கள்! (39: 54

    அவர்கள் தாம், மறுமையை விற்று இவ்வுலக வாழ்வை வாங்கியவர்கள். எனவே அவர்களுக்கு வேதனை இலேசாக்கப்படாது; அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள். (2: 86

    அவர்கள் நேர் வழி பெற வேண்டும் என்று நீர் பேராசை வைத்தால், அல்லாஹ் யாரை வழி கேட்டில் விட்டு விட்டானோ அவருக்கு நேர் வழி காட்ட மாட்டான். அவர்களுக்கு உதவி செய்வோரும் இல்லை. (16: 37)

    ReplyDelete
  13. கண்ணா ,

    முதல்லே யாரு news கொண்டு வர்றது முக்கியமில்லே ,கடைசியா கொண்டு வந்தாலும் யாரு correcta கொண்டு வர்றது தான் முக்கியம் ...

    ReplyDelete
  14. அவர்கள் எழுந்து நிற்கவும் சக்தி பெறவில்லை. அவர்கள் உதவி பெறுவோராகவும் இல்லை. (51: 45)

    தமக்கு உதவி செய்யப்பட அல்லாஹ்வையன்றி பல கடவுள்களை அவர்கள் ஏற்படுத்திக் கொண்டனர்.(36:74)

    அவனையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவிட இயலாது. தமக்கே அவர்கள் உதவ முடியாது. (7:197)

    இவ்வுலகிலும், மறுமையிலும் நல்லறங்கள் அழிந்து போனவர்கள் அவர்களே. அவர்களுக்கு உதவி செய்வோர் யாருமில்லை. (3: 22)

    உங்களுக்கு வேதனை வந்து, உங்களுக்கு உதவி செய்யப்படாத நிலை வருவதற்கு முன் உங்கள் இறைவனுக்குக் கட்டுப்பட்டு அவனிடமே திரும்புங்கள்! (39: 54

    அவர்கள் தாம், மறுமையை விற்று இவ்வுலக வாழ்வை வாங்கியவர்கள். எனவே அவர்களுக்கு வேதனை இலேசாக்கப்படாது; அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள். (2: 86

    அவர்கள் நேர் வழி பெற வேண்டும் என்று நீர் பேராசை வைத்தால், அல்லாஹ் யாரை வழி கேட்டில் விட்டு விட்டானோ அவருக்கு நேர் வழி காட்ட மாட்டான். அவர்களுக்கு உதவி செய்வோரும் இல்லை. (16: 37)

    ReplyDelete
  15. சகோதரர்களே அதிரை எக்ஸ்பிரஸில் தவறாக செய்தி வந்ததாக கூறியிருந்தீர்கள் திருத்தியுள்ளோம்

    அங்கு சொல்லியிருந்தால் வேகமாக மாற்றியிருப்போம்

    ReplyDelete
  16. அதிரையின் பல செய்தி ஊடகங்கள். அதில் மிக அழகாகவும், திறமையாகவும் நடுநிலையுடன் உண்மைகளை எத்திவைக்கும் ஒரு ஊடகம் உண்டு என்றால் அது தி அதிரை நியூஸ் ஒன்றுதான் என்பதை பெருவாரியான அதிரை நண்பர்கள் புரிந்துகொண்டுள்ளனர். ஏனென்றால் மற்ற ஊடகங்கள் தனக்கு சாதகமானதை மட்டும் பிரசுரிக்கின்றனர். எதிலும் உண்மைகள் இல்லாமல் செய்திகளை நண்பர்கள் வெளியிடுவது இல்லை. தனக்கு நியாயம், சரியானது இதை பலருக்கு எத்திவைக்கவேண்டும் என்பதை ஆர்வத்துடன் நண்பர்கள் எழுதுகின்றனர். ஆனால் சில உடகங்கள் தனக்கு எது சரியோ அதனைமட்டும் பிரசுரித்து, மக்களை தவறாக வழிநடத்தி மிகப்பெரிய பாவச்செயலுக்கு ஆளாகி நிக்கின்றனர் என்பது கண்கூடு. அதில் ஒரு ஊடக பெயர்மட்டும் வெளிவந்துள்ளது. இன்னும் ஒரு ஊடகம் இருக்கின்றது என்பதும் நண்பர்களே இனி வரும் காலங்களில் நண்பர்களே தெரியப்படுத்துவார்கள் என்று நம்புவோம். உண்மைகளை தெளிவாக அறிந்தவன் நம்மில் யாரும் இல்லை. ஆனாலும் படிப்பவர்கள் சிந்தித்து புரிந்துகொள்வார்கள். பலரின் கருத்துகளின் காரணமாக எழுதியோரும் தவறு என்றால் திரிந்திக்கொள்வார்கள். அல்லாஹ் நாம் யாவருக்கும் உள்ளதை உள்ளபடி உண்மைகளை அறிந்துகொள்ள அருள்செய்வானாக!

    ReplyDelete
  17. அன்புள்ளம் கொடவர்களே!

    //கடந்த 525 வருடங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகின்ற காட்டுப்பள்ளி கந்துரியை அதிரையில் வசிக்கும் மார்க்க அறிஞர்கள் பலர் விரும்பவில்லை என்றாலும் அவர்கள் தங்களின் எதிர்ப்பையோ / ஆதரவையோ பகிரங்கமாக தெரியப்படுத்தியதில்லை.//

    என்ற செய்தியைப் படிக்கும்பொழுது, சில சிந்தனைகள் வந்ததை பதிவு செய்கிறேன்.

    525 வருடங்கள் என்றால் ஆலிம்கள் அனுமதியுடன்தான் நடந்திருக்கவேண்டும். இடையில் சில மாற்றங்கள் அதில் உள்ளேபுகுந்துவிட்டது. அதனைக் நீக்கவேண்டும். காரணம் நடதவேண்டியவர்கள் ஒதிங்கியதால் இருக்கலாம். அதற்காக கந்தூரியே தவறானது என்றமுடிவுக்கு வருதுல் நாம் நம் முன்னோர்களை தவறானவர்கள் என்று கருதியதர்க்கு சமம்.

    மறைந்து வாழும்(இது அவரவர் தெளிவைப்பொருத்தது) மகான்களின் சரித்திரங்கள், அவர்களின் வழிகாட்டல்கள் இதனை கவிதைகள்(மவ்லிது) மூலம் அவர்களின் நினைவுதினத்தில் நினைவுபடுத்தி நல்வாழ்வு வாழவேண்டும் என்னும் செயல்பாடுகளே கந்தூரி வைபவம் ஆகும். இதனை எப்படி யாரும் தடுப்பார்கள்.

    ஆலிம்கள் தவறுகளைத்தான் கூடாது என்பார்கள். ஆனால் கந்தூரியே கூடாது என்று சொல்லமாட்டார்கள். அவ்வாறு தவறு என்பவர்கள் சுன்னத் ஜமாஅத் அல்லாத வஹ்ஹாபிகள் ஆவார்கள். இன்றும்கூட அதுபோன்ற கந்தூரிகள் நடக்கின்றது. கந்தூரி அதிரையில் மட்டும் அல்ல இந்தியா முழுவதும் நடக்கின்றது. இஸ்லாம் இந்தியாவில் வந்த காலத்திலிருந்து நடந்து வருகின்றது. இதனை எப்படி தவறு என்பது?

    அனாச்சாரங்கள் என்றால் என்ன? அறிவார்ந்த பதிலை தேடுகிறேன்.

    அதிரையில் கந்தூரி மேலத்தெரு, கீழத்தெரு பெரியவர்கள் நடத்துவதற்கு முன்னால் எந்த தெருவைச் சேர்ந்தவர்கள் யார் நடத்தினார்கள் என்ற விபரங்கலும் இல்லாமல் இவ்வூரின் சரித்திரம் எழுதமுடியாது!

    உண்மைகள் இல்லாமல் எதுவும் நடப்பதில்லை. ஆனாலும் சில தவறுகளை நீக்கவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.அதற்காக அதனை வேரோடு பிடுங்க வேண்டும் என்பதில்லை, அது முடியாது! ஆனாலும் முடியும் மார்க்கம் மாறியவர்கள் ஒதுங்கியிருக்க முடியும். ஊர் அமைதியாக இருக்க அவர்கள் ஒதுங்கியிருக்க முடியும். அதைத்தான் 'லக்கும் தீனுக்கும் வலியத்தீன்' என்று வேதம் வழிகாட்டுகிறது. அத்திருவேதத்தின்படி நடப்போமா!?
    அதிவிடுத்து லட்டெர் பேடுகளை வேஸ்ட் செய்யவேண்டாம்!

    ReplyDelete
  18. //அவர்கள் எழுந்து நிற்கவும் சக்தி பெறவில்லை. அவர்கள் உதவி பெறுவோராகவும் இல்லை. (51: 45)

    தமக்கு உதவி செய்யப்பட அல்லாஹ்வையன்றி பல கடவுள்களை அவர்கள் ஏற்படுத்திக் கொண்டனர்.(36:74)

    அவனையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவிட இயலாது. தமக்கே அவர்கள் உதவ முடியாது. (7:197)

    இவ்வுலகிலும், மறுமையிலும் நல்லறங்கள் அழிந்து போனவர்கள் அவர்களே. அவர்களுக்கு உதவி செய்வோர் யாருமில்லை. (3: 22)

    உங்களுக்கு வேதனை வந்து, உங்களுக்கு உதவி செய்யப்படாத நிலை வருவதற்கு முன் உங்கள் இறைவனுக்குக் கட்டுப்பட்டு அவனிடமே திரும்புங்கள்! (39: 54

    அவர்கள் தாம், மறுமையை விற்று இவ்வுலக வாழ்வை வாங்கியவர்கள். எனவே அவர்களுக்கு வேதனை இலேசாக்கப்படாது; அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள். (2: 86

    அவர்கள் நேர் வழி பெற வேண்டும் என்று நீர் பேராசை வைத்தால், அல்லாஹ் யாரை வழி கேட்டில் விட்டு விட்டானோ அவருக்கு நேர் வழி காட்ட மாட்டான். அவர்களுக்கு உதவி செய்வோரும் இல்லை. (16: 37)//

    மேற்கண்ட வாசனங்கள் இறைநேசர்களுக்காக வந்தவைகள் அல்ல. தவறாக மக்களைக் குழப்பவேன்ன்டம்.

    ReplyDelete
  19. கந்தூரி அதிரையில் மட்டும் அல்ல இந்தியா முழுவதும் நடக்கின்றது. இஸ்லாம் இந்தியாவில் வந்த காலத்திலிருந்து நடந்து வருகின்றது. இதனை எப்படி தவறு என்பது?

    என் சகோதரரே இந்தியாவில் மட்டும் தான் அவ்லியாக்கள் இருக்கிறார்களா? இங்கு அவ்ளியாகளை யாரும் குறை கூற வில்லை அங்கு நடக்கும் கந்தூரி எனும் வழிபாடு போல் நடக்கும் செயல்களை தான் தேவை அற்றது என கூறுகிறோம், சகோதரரே நீங்களும் இன்ஷா அல்லாஹ் விரைவில் உணர்வீர்கள்

    ReplyDelete
  20. அஸ்ஸலாமு அழைக்கும்

    அன்புச்சகோதரர்களே,

    பதிவுக்கு தொடர்பில்லாத கருத்துகளை குறிப்பாக பிற சகோதர வலைத்தளங்களின் நிறை / குறைகளை இங்கே குறிப்பிடவேண்டாம்.

    ReplyDelete
  21. அஸ்ஸலாமு அழைக்கும்

    அன்புச்சகோதரர்களே,

    நிறை / குறைகளை, சுட்டி காட்டுவதுதான் கருத்து பதிவாகும், மற்ற படி குறை கூறும் நோக்கம் அல்ல

    ReplyDelete
  22. //மேற்கண்ட வாசனங்கள் இறைநேசர்களுக்காக வந்தவைகள் அல்ல. தவறாக மக்களைக் குழப்பவேன்ன்டம்.//

    குரான் வசனம் என்பதையாவது ஒத்துக்கொள்வீர்கள் தானே ?

    ReplyDelete
  23. ''அல்லாஹ் அருளியதைப் பின்பற்றுங்கள்!'' என்று அவர்களிடம் கூறப்பட்டால் ''எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதையே பின்பற்றுவோம்'' என்று கூறுகின்றனர். அவர்களின் முன்னோர்கள் எதையும் விளங்காமலும், நேர் வழி பெறாமலும் இருந்தாலுமா? (2:170

    நமது தெளிவான வசனங்கள் அவர் களுக்குக் கூறப்பட்டால் ''இவர் உங்கள் முன்னோர்கள் வணங்கி வந்ததை விட்டு உங்களைத் தடுக்க நினைக்கும் மனித ராகவே இருக்கிறார்'' எனக் கூறுகின்றனர். ''இது இட்டுக்கட்டப்பட்ட அவதூறு தான்'' எனவும் கூறுகின்றனர். தங்களிடம் உண்மை வந்த போது ''இது தெளிவான சூனியம் தவிர வேறு இல்லை'' என்று (ஏக இறைவனை) மறுப்போர் கூறுகின்றனர். (34:43)


    அவர்களுக்கு அறிவுரை கூறப்பட்டால் படிப்பினை பெறுவதில்லை. (37:13

    அவனிடம் நமது வசனங்கள் கூறப்பட்டால் ''முன்னோர்களின் கட்டுக் கதைகள்'' எனக் கூறுகிறான். (68:15

    நம்பிக்கை கொண்டோர் யார் எனில் அல்லாஹ்வைப் பற்றிக் கூறப்பட்டால் அவர்களின் உள்ளங்கள் நடுங்கும். அவனது வசனங்கள் அவர்களுக்குக் கூறப்பட்டால் அது அவர்களின் நம்பிக்கையை அதிகப்படுத்தும். அவர்கள் தமது இறைவனையே சார்ந்திருப்பார்கள். (8:2)

    இவர்களுக்கு நமது தெளிவான வசனங்கள் கூறப்பட்டால் தம்மிடம் வந்த சத்தியத்தை மறுப்போர் ''இது தெளிவான சூனியம்'' என்று கூறுகின்றனர். (46:7)

    ''அல்லாஹ்வைத் தவிர வணக்கத் திற்குரியவன் வேறு யாருமில்லை'' என்று அவர்களிடம் கூறப்பட்டால் பெருமை யடிப்போராக அவர்கள் இருந்தனர். (37:35

    அல்லாஹ் மட்டும் கூறப்படும் போது, மறுமையை நம்பாதோரின் உள்ளங்கள் சுருங்கி விடுகின்றன. அவனல்லாதோர் கூறப்பட்டால் உடனே அவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர். (39:45)

    ''அல்லாஹ்வை அஞ்சிக் கொள்!'' என்று அவனிடம் கூறப்பட்டால் அவனது ஆணவம் அவனைப் பாவத்தில் ஆழ்த்து கிறது. அவனுக்கு நரகமே போதுமானது. அது மிகக் கெட்ட தங்குமிடம். (2:206

    ''அல்லாஹ் அருளியதை நோக்கியும், இத்தூதரை (முஹம்மதை) நோக்கியும் வாருங்கள்!'' என்று அவர்களிடம் கூறப்பட்டால் நயவஞ்சகர்கள் உம்மை ஒரேயடியாகப் புறக்கணிப்பதை நீர் காண்கிறீர். (4:61)

    நமது தெளிவான வசனங்கள் அவர்களுக்குக் கூறப்பட்டால் ''நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் எங்கள் முன்னோர்களைக் கொண்டு வாருங்கள்'' என்று கூறுவதைத் தவிர வேறு எதுவும் அவர்களது ஆதாரமாக இருப்பதில்லை. (45:25)

    அவனிடம் நமது வசனங்கள் கூறப்பட்டால் அகந்தை கொண்டவனாகவும், அதைச் செவியுறாதவனைப் போலவும், தனது காதுகளில் அடைப்பு உள்ளது போலவும் புறக்கணிக்கிறான். அவனுக்குத் துன்புறுத் தும் வேதனை உண்டு என எச்சரிப்பீராக! (31:7

    நமது தெளிவான வசனங்கள் அவர் களுக்குக் கூறப்பட்டால் (நம்மை) மறுப்போரின் முகங்களில் வெறுப்பைக் காண்கிறீர். நமது வசனங்களை அவர்களிடம் கூறுவோரைத் தாக்கவும் முற்படுவர். ''இதை விட கெட்டதை உங்களுக்கு நான் கூறட்டுமா?'' என (முஹம்மதே!) கேட்பீராக! அது தான் நரகம். மறுத்தோருக்கு அதையே அல்லாஹ் வாக்களித்துள்ளான். அது சென்றடையும் இடங்களில் மிகவும் கெட்டது. (22:72

    ReplyDelete
  24. நான் ரசித்த commentsகளில் ஒரு நல்ல comment.


    Canada Kader12 May 2013 00:45
    கண்ணா ,

    முதல்லே யாரு news கொண்டு வர்றது முக்கியமில்லே ,கடைசியா கொண்டு வந்தாலும் யாரு correcta கொண்டு வர்றது தான் முக்கியம் ...

    ReplyDelete
  25. // இங்கு அவ்ளியாகளை யாரும் குறை கூற வில்லை அங்கு நடக்கும் கந்தூரி எனும் வழிபாடு போல் நடக்கும் செயல்களை தான் தேவை அற்றது என கூறுகிறோம்,//

    நல்லது நண்பரே. வழிபாடு போல் நடக்கும் செயல்களைத்தான் தேவை அற்றது என்கிறீர்கள்.

    உங்களை மதிக்கின்றேன். வணக்கம் போல் உள்ள நீங்கள் எழுதிய 'வழிபாடு' எவைகள்?

    வணக்கம் என்றால் என்ன? வழிபாடு என்றால் என்ன?

    சிந்திக்கவேண்டும் என்பதற்காகத்தான் எழுதுகிறேன்.

    ReplyDelete
  26. //''அல்லாஹ் அருளியதைப் பின்பற்றுங்கள்!'' என்று அவர்களிடம் கூறப்பட்டால் ''எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதையே பின்பற்றுவோம்'' என்று கூறுகின்றனர். அவர்களின் முன்னோர்கள் எதையும் விளங்காமலும், நேர் வழி பெறாமலும் இருந்தாலுமா? (2:170

    நமது தெளிவான வசனங்கள் அவர் களுக்குக் கூறப்பட்டால் ''இவர் உங்கள் முன்னோர்கள் வணங்கி வந்ததை விட்டு உங்களைத் தடுக்க நினைக்கும் மனித ராகவே இருக்கிறார்'' எனக் கூறுகின்றனர். ''இது இட்டுக்கட்டப்பட்ட அவதூறு தான்'' எனவும் கூறுகின்றனர். தங்களிடம் உண்மை வந்த போது ''இது தெளிவான சூனியம் தவிர வேறு இல்லை'' என்று (ஏக இறைவனை) மறுப்போர் கூறுகின்றனர். (34:43)


    அவர்களுக்கு அறிவுரை கூறப்பட்டால் படிப்பினை பெறுவதில்லை. (37:13

    அவனிடம் நமது வசனங்கள் கூறப்பட்டால் ''முன்னோர்களின் கட்டுக் கதைகள்'' எனக் கூறுகிறான். (68:15

    நம்பிக்கை கொண்டோர் யார் எனில் அல்லாஹ்வைப் பற்றிக் கூறப்பட்டால் அவர்களின் உள்ளங்கள் நடுங்கும். அவனது வசனங்கள் அவர்களுக்குக் கூறப்பட்டால் அது அவர்களின் நம்பிக்கையை அதிகப்படுத்தும். அவர்கள் தமது இறைவனையே சார்ந்திருப்பார்கள். (8:2)

    இவர்களுக்கு நமது தெளிவான வசனங்கள் கூறப்பட்டால் தம்மிடம் வந்த சத்தியத்தை மறுப்போர் ''இது தெளிவான சூனியம்'' என்று கூறுகின்றனர். (46:7)

    ''அல்லாஹ்வைத் தவிர வணக்கத் திற்குரியவன் வேறு யாருமில்லை'' என்று அவர்களிடம் கூறப்பட்டால் பெருமை யடிப்போராக அவர்கள் இருந்தனர். (37:35

    அல்லாஹ் மட்டும் கூறப்படும் போது, மறுமையை நம்பாதோரின் உள்ளங்கள் சுருங்கி விடுகின்றன. அவனல்லாதோர் கூறப்பட்டால் உடனே அவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர். (39:45)

    ''அல்லாஹ்வை அஞ்சிக் கொள்!'' என்று அவனிடம் கூறப்பட்டால் அவனது ஆணவம் அவனைப் பாவத்தில் ஆழ்த்து கிறது. அவனுக்கு நரகமே போதுமானது. அது மிகக் கெட்ட தங்குமிடம். (2:206

    ''அல்லாஹ் அருளியதை நோக்கியும், இத்தூதரை (முஹம்மதை) நோக்கியும் வாருங்கள்!'' என்று அவர்களிடம் கூறப்பட்டால் நயவஞ்சகர்கள் உம்மை ஒரேயடியாகப் புறக்கணிப்பதை நீர் காண்கிறீர். (4:61)

    நமது தெளிவான வசனங்கள் அவர்களுக்குக் கூறப்பட்டால் ''நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் எங்கள் முன்னோர்களைக் கொண்டு வாருங்கள்'' என்று கூறுவதைத் தவிர வேறு எதுவும் அவர்களது ஆதாரமாக இருப்பதில்லை. (45:25)

    அவனிடம் நமது வசனங்கள் கூறப்பட்டால் அகந்தை கொண்டவனாகவும், அதைச் செவியுறாதவனைப் போலவும், தனது காதுகளில் அடைப்பு உள்ளது போலவும் புறக்கணிக்கிறான். அவனுக்குத் துன்புறுத் தும் வேதனை உண்டு என எச்சரிப்பீராக! (31:7

    நமது தெளிவான வசனங்கள் அவர் களுக்குக் கூறப்பட்டால் (நம்மை) மறுப்போரின் முகங்களில் வெறுப்பைக் காண்கிறீர். நமது வசனங்களை அவர்களிடம் கூறுவோரைத் தாக்கவும் முற்படுவர். ''இதை விட கெட்டதை உங்களுக்கு நான் கூறட்டுமா?'' என (முஹம்மதே!) கேட்பீராக! அது தான் நரகம். மறுத்தோருக்கு அதையே அல்லாஹ் வாக்களித்துள்ளான். அது சென்றடையும் இடங்களில் மிகவும் கெட்டது. (22:72//

    மேற்கண்ட வேதவரிகள் எதுவும் அவ்லியாக்கள் சம்பத்தப்பட்டது அல்ல!
    மக்களைக் குழப்பவேண்டாம்!

    வேத வரிகள் முன்பின் உள்ளவைகள் எல்லாவற்றையும் நிதானமாக உள்வாங்கவும்.
    மக்களைக் குழப்பவேண்டாம்!

    ReplyDelete
  27. திருடனா பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது பழப்மொழி அதுபோல் கந்தூரி கமிட்டியா பார்த்து திருந்தா விட்டால் கந்தூரியை ஒழிக்க முடியாது என்பது புதுப்மொழி.

    ReplyDelete
  28. This comment has been removed by the author.

    ReplyDelete
  29. மேலே உள்ள வசனங்கள் அனைத்தும் மிக தெளிவாக உள்ளது ,அல்லாஹ்வை தவிர வேறு எவரையும் வணங்க கூடாதென்று ..இதில் மக்களுக்கு குழப்பம் ஏற்படும்படி ஏதும் இல்லை,மாறாக உங்களை போன்ற (தெளிவு )அற்றவர்கள் ,(உண்மை )அற்றவர்கள் திருந்துவதற்கான வசனங்கள்.

    அல்லாவையன்றி வேறு யாரையும் வணங்க கூடாது என்பது மட்டுமின்றி

    அதை சொன்னால் அதற்கு நீங்கள் என்ன சொல்லுவீர்கள் என்பதை சொல்லும் வசனங்கள் அதற்கு அடுத்துள்ளவை

    ReplyDelete
  30. ஒன்றை புரிந்துகொண்டால் எல்லாம் சரியாகிவிடும். மறைவழியையும், நபி வழியையும் பின்பற்றி நாம் சரியாகி, நம் குடும்பத்தார் சரியாகி, நம் அண்டை அயலாரும் சரியானால், ஊரே சரியாகிவிடும். இப்படி ஒவ்வொரு மூமீனும் சரியானால் பிறகென்ன கவலை. சிந்திப்போம் செயல்படுவோம். சர்ச்சைகளையும், நீண்ட பதிவுகளையும் தயாரிக்கும் நேரத்தை குரான் ஓதுவதிலும், ஹதீஸ் கிரந்தங்களை படிபதிலும் செலவழிக்கலாமே. அதற்கும் முடியாவிட்டால் ஹலாலாக சம்பாதிக்க முயற்சி எடுத்து நம்மில் எல்லாம் ஹலாலாகிவிட்டால் நாம் கேட்கும் துஆவையும் அல்லா கபூல் செய்வான்.

    ReplyDelete
  31. " Canada. Maan. A. Shaikh12 May 2013 00:17
    They wanted to be express in news and end up in bringing (அதிரையில் இன்று மேலத்தெரு தர்கா கந்தூரி விழா நடைப்பெற இருக்கின்றது)wrong informations,

    people who visited AX this morning would know what i'm talking about... "

    what's wrong about this bro Maan ??? i don't understand...

    ReplyDelete
  32. அன்பு நண்பர்களே!

    //" Canada. Maan. A. Shaikh12 May 2013 00:17
    They wanted to be express in news and end up in bringing (அதிரையில் இன்று மேலத்தெரு தர்கா கந்தூரி விழா நடைப்பெற இருக்கின்றது)wrong informations,

    people who visited AX this morning would know what i'm talking about... "//

    மேலே எழுதியதில் அவர் உண்மையைத்தான் எழுதியுள்ளார். நிதானமாக அதைப் பார்த்தல் புரியும். ஆனாலும் இதில் பீடிகை வேண்டியதில்லை என்பதால் அவர்கள் எழுதிய உண்மையை இங்கு தருகிறேன்.

    //(அதிரையில் இன்று மேலத்தெரு தர்கா கந்தூரி விழா நடைப்பெற இருக்கின்றது)//
    இதை "அதிரையில் இன்று மகான் செய்கு நசுருத்தீன் வலியுல்லாஹ் கந்தூரி விழா நடைப்பெற இருக்கின்றது." என்று எழுதியிருந்தால் அதுதான் சரி.

    இதில் என்ன தவறு உள்ளது என்று இன்னமும் உங்கள் மனம் அலைமோதும்.

    //மேலத்தெரு தர்கா கந்தூரி விழா// இதில்தான் இன்னமும் இக்கருத்து தவறு எனக்காணலாம்

    ஒன்று இந்தவருடம் கீழத்தெரு பெரியவர்கள் கந்தூரி விழா ஏற்பாடுகள் செய்கின்றனர்.

    இரண்டாவது "அதிரையில் இன்று மகான் செய்கு நசுருத்தீன் வலியுல்லாஹ் கந்தூரி விழா நடைப்பெற இருக்கின்றது." இதில் கவனம் செலுத்தினால் அதில் என்ன தவறு என்பதுத் தெரியும்.

    சாதாரன மேற்கண்டவைகளிலேயே.....

    சிலவைகளை தெளிவாக எழுத்தில் கொண்டுவரமுடியாது கண்ணா! காரணம் அதில் அவ்வாறு எழுதுவதில் பல நன்மைகள் உள்ளது கண்ணா!
    அதனால் புரியாது என்பதில்லை, கண்ணா!
    தெளிவாகவே நிறைய மக்களுக்கு புரியும், கண்ணா!

    இப்படியெல்லாம் இருக்கு!...கண்ணா!

    ReplyDelete
  33. அன்பு நண்பர்களே!

    //அல்லாஹ்வை தவிர வேறு எவரையும் வணங்க கூடாதென்று//

    இதில் யாருக்கும் இருக்கருத்து இல்லை. இந்த குழப்பம் தீரத்தான் சில கேள்விகள் கேட்டேன். இன்னமும் பதில் இல்லை. அவ்வாறு இருக்க, என்னை ஏன் தேடவேண்டும்!
    அது சம்பந்தமாக எழுதியிருந்தால் களத்தில் உடன் கண்டு இருக்கலாம்.

    மீண்டும் எழுதுகிறேன். இரண்டு நாள் சம்பந்தப்பட்டவர்கள் அவகாசம் எடுத்துக்கொள்ளலாம்.நிதானமாக சிந்தித்து எழுதலாம்.

    வழிபாடு என்றால் என்ன?
    வணக்கம் என்றால் என்ன?
    அனாச்சாரம் என்றால் என்ன?

    இது தொடர்போல் நீளலாம். எனவே எல்லோரும் பார்க்கும்வண்ணம் செய்திகள் கீழே நகர்ந்து போகாமல் , தனியாக மேலே ஒரு இடம் வலைத்தட உரிமையாளர் நிலையாக ஓதிக்கினால் மிக நல்லதாக இருக்கும். இதற்கு ஏற்பாடு செய்தால் நல்லது.

    மேலும் ஆரோக்கியமான அழகான உதாரணங்கள் எழுதவேண்டும் 'திருடன்' போன்ற மேற்கோள்கள் நல்ல தரம் அல்ல.
    காரணம் அதிரை மக்கள் கண்ணியத்தை இவ்வுலகம் குறைவாக மதிப்பிடுதல் நாம் எல்லோருக்கும் தலைகுனிவுதானே!

    ReplyDelete
  34. அன்பு நண்பர்களே!

    நீங்கள் அடிக்கடி எழுதும் வார்த்தைகள் வழிபாடு,வணக்கம்,அனாச்சாரம். இவை சம்பந்தமாக உங்களது விளக்கங்கள் என்ன? என்பதை தெரிந்துகொள்ள, இத்தனை நாட்கள் காத்திருந்தேன். பதிலைக் காணோம்.

    கடைசிவரைக்கும் யாருக்கும் தெரியக்கூடது என்பதற்காகவா?

    இது தெரியாவிட்டால் உங்கள் கருத்துகளை எப்படி புரிந்துகொள்ள எங்களுக்கு இயலும்!

    உங்கள் விளக்கங்கள் வராது என்பதை நம்புகிறோம்.

    எனவே மக்களைக் குழப்பவேண்டாம். வேதவரிகளை அதன் தொடர்சிகளை விட்டுவிட்டு தனக்கு இஸ்டம்போல் அதன் இடையிடையே உள்புகுந்து தன்னோக்கிற்கு தகுந்தார்ப்போல் தவறாக விளக்கங்கள் காட்டவேண்டாம். நாளை மறுமையில் மட்டுமல்ல இவ்வுலக வாழ்விலும் நோய்கள் பற்றிக்கொள்ளும். அறிந்தோம் என்ற அறியாமல் செய்தவைகளுக்கு அல்லாஹ்(ஜல்) மன்னித்து நற்சிந்தனை என்ற வழிகாட்டுதலை தந்தருள்வானாக! ஆமீன்!

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.