.

Pages

Sunday, May 12, 2013

அதிரை TNTJ நடத்திய கோடைகால பயிற்சி முகாமின் இறுதி நாளில் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது !


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  அதிரை கிளையில் மாணவ / மாணவியருக்கான கோடைகால பயிற்சி முகாம் கடந்த 25-04-13 அன்று  துவங்கி வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதில் ஏராளமான மாணவ, மாண‌விகள்  சேர்ந்து  நல்லொழுக்கங்களையும் மார்க்க கல்வியையும் ப‌யின்று வந்தனர்.

மாணவ / மாணவிகளுக்கு தனித்தனியாக  ஏற்பாடு செய்து நடந்து வந்த இந்த பயிற்சி முகாமில் 200 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வந்தனர்.




இதன் நிறைவு நாள் நிகழ்ச்சி நேற்று [ 05-05-2013 ] மாலை தவ்ஹீத் பள்ளியில் நடைபெற்றது. இந்த பயிற்சி முகாமில் தேர்ச்சி பெற்ற மாணவ / மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும் பயிற்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பெரும்பாலான பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

5 comments:

  1. பயிற்சியில் கலந்துகொண்ட அணைத்து மாணவ / மாணவிகளுக்கும்
    மற்றும் பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. மாணவ மாணவியருக்கு பயன்படக்கூடிய இப்பயிற்ச்சியில் கலந்துகொண்டு பரிசுகள் பெற்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும் மற்றும் ஆசிரியர்களுக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  4. பரிசுகள் பெற்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும் மற்றும் ஆசிரியர்களுக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. மாணவ மாணவியருக்கு பயன்படக்கூடிய இப்பயிற்ச்சியில் கலந்துகொண்டு பரிசுகள் பெற்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும் மற்றும் ஆசிரியர்களுக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.